கோவை இரிடியம் மோசடி வழக்கு: ஓட்டுநர் மற்றும் நண்பர்கள் மூலம் ரூ.30 லட்சம் பணத்தை கொள்ளையடித்தது அம்பலம்…!

மனோகரனை இரிடியம் இருப்பதாக கூறி கோவை வரவழைத்தது யார்? மீதி பணம் யாரிடம் கொடுத்து வைக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையைச் சேர்ந்த நபர் ஒருவர் தன்னிடம் "இரிடியம்" உள்ளதாக தேனி மாவட்டத்தை சேர்ந்த மனோகரன் என்பவரை ரூபாய். 30 லட்சத்துடன் கோவைக்கு வர சொல்லி, அதை நம்பி கோவை வந்த மனோகரன் தங்கியிருந்த ஓட்டல் விடுதிக்கு வந்த மர்ம நபர்கள் போலீசார் என்று கூறி பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், விசாரணையில் பல்வேறு திடிக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேனி மாவட்டத்தை சேர்ந்த மனோகரன் என்பவரை இரிடியம் உள்ளதாக கோவையைச் சேர்ந்த நபர் ஒருவர் வரவழைத்துள்ளார். மேலும், விலை மதிப்புமிக்க இந்த இரிடியத்தை வாங்க ரூ.30 லட்சத்துடன் வருமாறும் கூறியுள்ளார். இதனை நம்பி, மனோகரன் ரூ.30 லட்சம் பணத்துடன் தனது கார் ஓட்டுனர் வேலு என்பவருடன் கடந்த ஏப்ரல் 18ம் தேதி, சிங்கநல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார்.



அப்போது, மாலை 7 மணியளவில் மனோகரன் தங்கியிருந்த அறைக்கு வந்த 2 மர்ம நபர்கள், தாங்கள் போலீஸ் எனக்கூறி மனோகரனை மிரட்டியதோடு, அவரிடமிருந்து ரூ.30 லட்சம் ரூபாயை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். சுதாரித்துக்கொண்ட மனோகரன், இது தொடர்பாக சிங்காநல்லூர் போலீஸில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சந்தேகத்தின் பேரில் ஓட்டுனர் வேலுவிடம் விசாரணை நடத்தினர். முதலில், முன்னுக்கு பின் முரணாக பேசிய வேலு, பின்னர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

பணத்துடன் மனோகரன் கோவை வருவதை அறிந்து கொண்ட வேலு, தனது நண்பர்களான தேனியை சேர்ந்த நிர்மல் செல்வன் மற்றும் வினோத்குமார் ஆகியோருடன் சேர்ந்து பணத்தை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். இதன்படி, அன்று மாலை வேலு, வெளியே சென்ற போது, மனோகரன் தனியாக இருக்கும் தகவலை கூட்டாளிகளுக்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அங்கு வந்த இருவரும் மனோகரனை மிரட்டி, பணத்தை பறித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, வேலு உட்பட மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.7.5 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மூவரும் கொள்ளையடித்த பணத்தில் ஒரு தொகையை, கோவையை சேர்ந்த இருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக தெரிகிறது. தொடர்ந்து, மனோகரனை இரிடியம் இருப்பதாக கூறி கோவை வரவழைத்தது யார்? மீதி பணம் யாரிடம் கொடுத்து வைக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...