கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பிளஸ்-2 பொதுத்தேர்வு 119 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வினை 35 ஆயிரத்து 113 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.
கோவை: தமிழகம் முழுவதும் இன்று 12ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுகிறது. இதற்காக, பல்வேறு நெறிமுறைகளை மாநில தேர்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பிளஸ்-2 பொதுத்தேர்வு 119 மையங்களில் நடைபெறுகிறது.
தேர்வினை, 35,113 மாணவ - மாணவிகள் எழுதுகின்றனர்.
காலை 10 மணி முதல் 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், காலை 10.15 முதல் பிற்பகல் 1.15 மணி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறும் என தேர்வு மையம் கூறியுள்ளது.
பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கி, வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு மையங்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்திற்குள் ஷூ, பெல்ட் அணிந்து வரவும் அனுமதி இல்லை, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வின்போது, தேர்வு எழுதுபவர்கள் ஆட்சேபனைக்குரிய பொருட்களை வைத்திருந்து பயன்படுத்தியிருந்தால், அன்றைய தேர்வு ரத்து செய்யப்படுவதுடன் அடுத்த ஓராண்டு, அதாவது இரு பருவத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும், எனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், கொரோனா நோய் தடுப்பு விதிமுறைப்படி தேர்வு மையங்களில் கிருமி நாசினிகள் வைக்கப்பட்டுள்ளன.