12ம் வகுப்பு பொது தேர்வு துவக்கம்: கோவையில் 35 ஆயிரம் மாணவ - மாணவிகள் தேர்வு எழுதவுள்ளனர்

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பிளஸ்-2 பொதுத்தேர்வு 119 மையங்களில் நடைபெறுகிறது. இந்த தேர்வினை 35 ஆயிரத்து 113 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்.



கோவை: தமிழகம் முழுவதும் இன்று 12ம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுகிறது. இதற்காக, பல்வேறு நெறிமுறைகளை மாநில தேர்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பிளஸ்-2 பொதுத்தேர்வு 119 மையங்களில் நடைபெறுகிறது.



தேர்வினை, 35,113 மாணவ - மாணவிகள் எழுதுகின்றனர்.



காலை 10 மணி முதல் 10.10 மணி வரை மாணவர்கள் வினாத்தாளை படிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பின்னர், காலை 10.15 முதல் பிற்பகல் 1.15 மணி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறும் என தேர்வு மையம் கூறியுள்ளது.



பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்கி, வரும் 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தேர்வு மையங்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்திற்குள் ஷூ, பெல்ட் அணிந்து வரவும் அனுமதி இல்லை, என தெரிவிக்கப்பட்டுள்ளது.



தேர்வின்போது, தேர்வு எழுதுபவர்கள் ஆட்சேபனைக்குரிய பொருட்களை வைத்திருந்து பயன்படுத்தியிருந்தால், அன்றைய தேர்வு ரத்து செய்யப்படுவதுடன் அடுத்த ஓராண்டு, அதாவது இரு பருவத் தேர்வுகள் எழுத தடை விதிக்கப்படும், எனவும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், கொரோனா நோய் தடுப்பு விதிமுறைப்படி தேர்வு மையங்களில் கிருமி நாசினிகள் வைக்கப்பட்டுள்ளன.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...