வால்பாறையில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் தலைமையில் சிறப்பு மனு பெரும் முகாம்..!

இந்த முகாமில் 364-மனுக்கள் பெறப்பட்டது. இதற்கான தீர்வு காணப்பட்டு வருகிற 21-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் தெரிவித்தார்.


கோவை: வால்பாறையில் சிறப்பு மனு பெரும் முகாம் சார் ஆட்சியர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 350-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வருகிற 21-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் நலத்திட்டம் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதற்காகத் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி ஒவ்வொரு பகுதிகளிலும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு அதற்கான தீர்வு ஏற்பட்டு நலத்திட்டங்களைச் செய்வதற்கு தமிழக அரசு அறிவுறுத்தல் செய்தது.

இந்நிலையில், வால்பாறையில் துணை ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ்ராவ் தலைமையில் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு மனு பெறும் முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில் வால்பாறை பகுதியில் உள்ள பொதுமக்கள் பல்வேறு இடங்களில் உள்ள மக்களுக்குத் தேவைகளை மனுவாக எழுதி சார் ஆட்சியர் அவர்களிடம் வழங்கினார்.



வால்பாறை அருகே உள்ள நெடுங்குன்றம் ஆதிவாசி பழங்குடியினர் கிராமத்துக்குச் சாலை வசதி வேண்டும் என்றும் வயதானவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி தொகை மற்றும் இருசக்கர வாகனங்கள் வேண்டுமென்றும் வேலை இல்லாதவர்களுக்கு வேலை வேண்டும் என்றும் பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்றும் மக்கள் மனுக்கள் பெறப்பட்டது.

காலை சுமார் 11-மணி அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த முகாமில் 364-மனுக்கள் பெறப்பட்டது. இதற்கான தீர்வு காணப்பட்டு வருகிற 21-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...