திருப்பூரில் ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு.. 3-மாதம் அவகாசம் வேண்டும்: மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை..!

பொதுத்தேர்வு முடியும் வரை அகற்றும் பணி நடைபெறாது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள் கட்டாயம் 3-மாதம் அவகாசம் வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: பொதுத்தேர்வு முடியும் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது, 3 மாதம் அவகாசம் வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலங்காடு பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்தும் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர்.

இதனிடையே, அவர்களுக்கு குடிசை மாற்று வாரியம் சார்பில் வீரபாண்டியில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதுநாள் வரை வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் தங்களது குடியிருப்புக்கு செல்லவில்லை.

இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவையடுத்து அப்பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று துவங்குவதற்காக வந்தனர்.



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியோர் உள்ளிட்ட சுமார் 200-க்கும் மேற்பட்டவர்கள் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்த 3-மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் ராயபுரம் கருவம்பாளையம் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு திருப்பூர் காவல்துறை துணை ஆணையர் ரவி மற்றும் மூன்றாவது மண்டல துணை ஆணையர் வாசுவிக்ரம் மற்றும் நான்காவது மண்டல துணை ஆணையர் செல்வநாயகம் ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.



நாளை முதல் பொதுத்தேர்வு துவங்குவதால் பொதுத்தேர்வு முடியும் வரை அகற்றும் பணி நடைபெறாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் பொதுமக்கள் கட்டாயம் 3-மாதம் அவகாசம் வேண்டும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...