கோவை மாநகராட்சி மேட்டுப்பாளையம்‌ சாலையில் உள்ள சங்கனூர்‌ பள்ளம்‌ மேம்பாட்டுப்பணிகள் ஆய்வு..!

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேட்டுப்பாளையம்‌ சாலையில்‌ உள்ள சங்கனூர்‌ பள்ளம்‌ ரூ.49-கோடி மதிப்பீட்டில்‌ மேம்பாட்டுப்பணிகள்‌ நடைபெற்றுவருவதை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.


கோவை: மாநகராட்சி மேட்டுப்பாளையம்‌ சாலையில் உள்ள சங்கனூர்‌ பள்ளம்‌ மேம்பாட்டுப்பணிகளை மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌.



இந்த ஆய்வின்‌ போது மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா உடனிருந்தார்‌.

இந்த ஆய்வின்போது மேயர்‌ கல்பனா ஆனந்தகுமார்‌ தெரிவித்ததாவது,

“தமிழ்நாடு முதலமைச்சர்‌‌, கோயம்புத்தூர்‌ மாநகராட்சி மேட்டுப்பாளையம்‌ சாலையில்‌ உள்ள சங்கனூர்‌ பள்ளம்‌ ரூ.49-கோடி மதிப்பீட்டில்‌ நிதி ஒதுக்கீடு செய்து பணியை தொடங்கி வைத்துள்ளார்‌. தற்போது சங்கனூர்‌ பள்ளம்‌ மேம்பாட்டுப்பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

சுமார்‌ 2.3-கிலோ மீட்டர்‌ தொலைவிற்கு சங்கனூர்‌ பள்ளம்‌ மேம்பாட்டுப்பணிகளில்‌, 208-மீட்டர் தொலைவிற்கு பணியானது நடைபெற்றுள்ளது. சங்கனூர்‌ பள்ளம்‌ கரையின்‌ இரு பகுதிகளிலும்‌ அடித்தள கான்கரீட்‌ 4.5-மீட்டர் அகலத்தில்‌ அமைக்கப்பட்டுள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும்‌ பணிகளின்‌ தரம்‌ ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும்‌, தொடர்ந்து பணிகள்‌ செய்து முடிக்க இரு பகுதிகளிலும்‌ உள்ள ஆக்கிரமிப்புகள்‌ அகற்ற மாநகராட்சி சம்பந்தப்பட்ட உதவி ஆணையர்கள்‌, உதவி நகரமைப்பு அலுவலர்கள்‌ மற்றும்‌ பொறியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.” என மேயர்‌ தெரிவித்தார்‌.

அதனைத்‌ தொடர்ந்து, வடக்கு மண்டலம்‌ 18-வது வார்டுக்குட்பட்ட மணியகாரன் பாளையம்‌ நல்லாம்பாளையம்‌ தார்‌ சாலை மிகவும்‌ பழுதடைந்துள்ளதை நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, உடனடியாக சாலையைச் சரிசெய்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர அறிவுறுத்தினார்‌.

பின்னா்‌, 32-வது வார்டு, நாராயணசாமி வீதியில்‌ ரூ.33.60 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ நடைபெற்ற வரும்‌ சிறுவர் விளையாட்டுத்திடல்‌ கட்டுமானப்பணியினை நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்‌. அதன்‌ பின்னர், சங்கனூர்‌ மயானத்தை நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, எரியூட்டு மயானத்தைத் தானியங்கி மயானமாக மாற்றிடத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தினார்‌.

இந்த ஆய்வின்போது மத்திய மண்டல தலைவர்‌ மீனாலோகு, மேற்கு மண்டல தலைவர்‌ கே.ஏ.தெய்வயானை தமிழ்மறை, மண்டல உதவி ஆணையார்கள்‌ சரவணன்‌, சங்கர், உதவி செயற்பொறியாளர்‌ (Jnnurm & Water Supply) இராமசாமி, மாமன்ற உறுப்பினர்கள்‌ ரா.பார்த்திபன்‌, எ.கிருஷ்ணமூர்த்தி, பேபிசுதா ரவி, வைரமுருகன்‌ என்கிற முருகன்‌, ஆர்‌.பிரபாகரன்‌, உதவி செயற்பொறியாளர்‌ புவனேஸ்வரி, உதவி நகரமைப்பு அலுவலர்‌ (பொ) விமலா, மண்டல சுகாதார அலுவலர்கள்‌ பரமசிவம்‌, இராமசாமி மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...