எங்களுக்கு இது வேண்டாங்க... கோவையில் புதிதாக அமைய உள்ள 'டாஸ்மாக்' கடைக்கு எதிர்ப்பு..!

கோவை கீரணத்தம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் மற்றும் குடியிருப்பு மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் மற்றும் குடியிருப்பு மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சரவணம்பட்டி அடுத்த கீரணத்தம் பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் காந்திபுரம், சாய்பாபா காலனி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்த பொதுமக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த குடியிருப்பில் மட்டும் சுமார் 1,230-குடும்பங்கள் வசித்து வருகிறது. அதேபோல், சுற்றுவட்டார பகுதிகளிலும் சுமார் 300-குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்நிலையில், அந்த குடியிருப்பு அருகே புதிய டாஸ்மாக் கடையை திறக்க உள்ளதாக அரசு தெரிவித்தது.



அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி மற்றும் அப்பகுதி மக்கள் குடியிருப்பு வாசிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஏற்கனவே, அந்த பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக டாஸ்மாக் கடை வந்தால் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



குறிப்பாகத் தினசரி கூலி வேலைக்குச் செல்வோர் அதிகளவு அந்த குடியிருப்பில் உள்ளதால், தங்கள் தினசரி வருமானத்தை அப்படியே டாஸ்மாக் கடைக்குக் கொண்டு கொடுக்கும் நிலை ஏற்படும் என தெரிவித்தனர்.



உடனடியாக டாஸ்மாக் வருவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி கோசங்களை எழுப்பினர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...