எங்களுக்கு இது வேண்டாங்க... கோவையில் புதிதாக அமைய உள்ள 'டாஸ்மாக்' கடைக்கு எதிர்ப்பு..!

கோவை கீரணத்தம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு அருகே புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் மற்றும் குடியிருப்பு மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: புதிதாக அமைய உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியினர் மற்றும் குடியிருப்பு மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை சரவணம்பட்டி அடுத்த கீரணத்தம் பகுதியில் உள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் காந்திபுரம், சாய்பாபா காலனி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்த பொதுமக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த குடியிருப்பில் மட்டும் சுமார் 1,230-குடும்பங்கள் வசித்து வருகிறது. அதேபோல், சுற்றுவட்டார பகுதிகளிலும் சுமார் 300-குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்நிலையில், அந்த குடியிருப்பு அருகே புதிய டாஸ்மாக் கடையை திறக்க உள்ளதாக அரசு தெரிவித்தது.



அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி மற்றும் அப்பகுதி மக்கள் குடியிருப்பு வாசிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



ஏற்கனவே, அந்த பகுதியில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக டாஸ்மாக் கடை வந்தால் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



குறிப்பாகத் தினசரி கூலி வேலைக்குச் செல்வோர் அதிகளவு அந்த குடியிருப்பில் உள்ளதால், தங்கள் தினசரி வருமானத்தை அப்படியே டாஸ்மாக் கடைக்குக் கொண்டு கொடுக்கும் நிலை ஏற்படும் என தெரிவித்தனர்.



உடனடியாக டாஸ்மாக் வருவதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோரி கோசங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...