கோவை தெப்பக்குளம் வீதி அருகே வாடகை வீட்டில் அழுகிய நிலையில் இளைஞர் உடல் சடலமாக மீட்பு - போலீசார் தீவிர விசாரணை…!

கோவை தெப்பக்குளம் லிங்கப்பச்செட்டி வீதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த முஜிபூர் மாலிக் (24) என்பவர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா..? என்ற கோணத்தில் ஆர்.எஸ்.புரம் போலீசார் தீவிர விசாரணை.

கோவை: கோவை தெப்பக்குளம் லிங்கப்பச்செட்டி வீதியை சேர்ந்தவர் கோபால் (51). இவர் தனக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார். 

அதில், மூன்றாவது தளத்தில் முஜிபூர் மாலிக் (24) என்பவர் கடந்த 2020 ஆண்டு முதல் தனது உறவினர்கள் நான்கு பேருடன் வசித்து வந்தார். மேலும், அவர்கள் சேலை உள்ளிட்ட ஆடைகளுக்கு எம்பிராய்டரி செய்யும் வேலை செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்கள் நீண்ட நாட்களாக வாடகை தராமல் இருந்ததாக தெரிகிறது. மேலும், வாடகை கேட்க செல்போனில் அழைத்தபோதும் போனை எடுக்காமல் இருந்ததால் சந்தேகமடைந்த கோபால் நேற்று இரவு மூன்றாவது தளத்தில் வாடகைக்கு இருந்த மாலிக்கின் வீட்டிற்குள் சென்று பார்த்தார். 

அப்போது, வீடு திறந்திருந்து யாரும் இல்லாத நிலையில், அங்கு அதிக துர்நாற்றம் வீசியதால், பூட்டப்பட்டிருந்த சமையல் அறையை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு அழுகிய நிலையில் முஜிபூர் மாலிக் சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, உடனடியாக அவர் ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். 

தகவல் அறிந்து அங்கு வந்த ஆர்.எஸ். புரம் போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார்? அவர் கொல்லப்பட்டாரா..? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா?அவருடன் இருந்த உறவினர்கள் எங்கு சென்றார்கள்?என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...