கோவை செட்டிபாளையம் அருகே கிணற்றில் தவறி விழுந்த 102 வயது மூதாட்டி உயிரிழப்பு

102 வயது ஆனதால் சுப்பாத்தாளுக்கு கண்பார்வை சற்று மங்கலாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு அவர் சிறுநீர் கழிக்க வீட்டின் பின்னால் சென்ற போது, கிணற்றில் அவர் தவறி விழுந்துள்ளார்.


கோவை: கோவை செட்டிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் காளியப்பகவுண்டர், இவரது மனைவி சுப்பாத்தாள் (102). இவர் தனது பேரன் பாலசுப்பிரமணியத்துடன் வசித்து வருகிறார்.

102 வயது ஆனதால் சுப்பாத்தாளுக்கு கண்பார்வை சற்று மங்கலாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு சுப்பாத்தாள் சிறுநீர் கழிக்க வீட்டின் பின்னால் சென்றதாக தெரிகிறது. அப்போது, அங்கிருந்த கிணற்றில் அவர் தவறி விழுந்துள்ளார்.

பின்னர், நீண்ட நேரமாகியும் அவர் உள்ளே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள், பின்னால் சென்று பார்த்தபோது, அவர் கிணற்றுக்குள் விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பாலசுப்பிரமணியம், செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.

இதையடுத்து, அங்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...