102 வயது ஆனதால் சுப்பாத்தாளுக்கு கண்பார்வை சற்று மங்கலாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு அவர் சிறுநீர் கழிக்க வீட்டின் பின்னால் சென்ற போது, கிணற்றில் அவர் தவறி விழுந்துள்ளார்.
கோவை: கோவை செட்டிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் காளியப்பகவுண்டர், இவரது மனைவி சுப்பாத்தாள் (102). இவர் தனது பேரன் பாலசுப்பிரமணியத்துடன் வசித்து வருகிறார்.
102 வயது ஆனதால் சுப்பாத்தாளுக்கு கண்பார்வை சற்று மங்கலாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு சுப்பாத்தாள் சிறுநீர் கழிக்க வீட்டின் பின்னால் சென்றதாக தெரிகிறது. அப்போது, அங்கிருந்த கிணற்றில் அவர் தவறி விழுந்துள்ளார்.
பின்னர், நீண்ட நேரமாகியும் அவர் உள்ளே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள், பின்னால் சென்று பார்த்தபோது, அவர் கிணற்றுக்குள் விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பாலசுப்பிரமணியம், செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து, அங்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
102 வயது ஆனதால் சுப்பாத்தாளுக்கு கண்பார்வை சற்று மங்கலாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு சுப்பாத்தாள் சிறுநீர் கழிக்க வீட்டின் பின்னால் சென்றதாக தெரிகிறது. அப்போது, அங்கிருந்த கிணற்றில் அவர் தவறி விழுந்துள்ளார்.
பின்னர், நீண்ட நேரமாகியும் அவர் உள்ளே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள், பின்னால் சென்று பார்த்தபோது, அவர் கிணற்றுக்குள் விழுந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பாலசுப்பிரமணியம், செட்டிபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து, அங்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.