திருப்பூரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட பரதநாட்டியத்துக்கு உலக சாதனை அங்கீகாரம்..!

திருப்பூர் கவிநயா நாட்டியப்பள்ளி சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 121-மாணவிகள் பரத நாட்டிய நடனமாடி உலக சாதனையை நிகழ்த்தினார்கள்.


திருப்பூர்: பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 121-குழந்தைகள் பங்கேற்ற உலக சாதனைக்கான பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சி முடிவில் உலக சாதனைக்காக சான்று வழங்கப்பட்டது.

திருப்பூர் கவிநயா நாட்டியப்பள்ளி சார்பில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 121-மாணவிகள் பரத நாட்டிய நடனமாடி உலக சாதனையை இன்று நிகழ்த்தினார்கள்.



இதில் 3-வயது முதல் 18-வயது வரையிலான 121-மாணவிகள் சிக்கண்ணா கல்லூரி மைதானத்தில் பரத நாட்டிய நடனமாடி அசத்தினார்கள்.



இது குழந்தைகள் மற்றும் பெண்கள் குறித்த விழிப்புணர்வுக்கான உலகின் மிகப்பெரிய விழிப்புணர்வு பரத நாட்டிய நிகழ்ச்சியாக ராபா உலக சாதனை நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

இதற்கான உலக சாதனை சான்றிதழை திருப்பூர் மேயர் தினேஷ்குமார் கவிநயா நாட்டியப்பள்ளிக்கு வழங்கினார். மேலும் ஒவ்வொரு மாணவிகளுக்கும் தனித்தனியே சான்றிதழை மேயர் தினேஷ்குமார் வழங்கினார்.

இந்நிகழ்வில் இராபா புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு ஆசிரியர் பிரசன்னா, கவிநயா நாட்டியப்பள்ளி ஆசிரியர் மேனகா, ஆசிரியை ஜெயந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...