பல்லடம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனமும், சொகுசு காரும் மோதி விபத்து..!

சொகுசு காரில் வந்த திருச்சியை சேர்ந்த 2-குழந்தைகள் உட்பட 6-பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


திருப்பூர்: பல்லடம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனமும், சொகுசு காரும் மோதி விபத்துக்குள்ளானது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொல்லிக்காளிபாளையம் பகுதியிலிருந்து அரிசி மூட்டைகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் ஒன்று பொங்கலூரில் உள்ள அரிசி மண்டிக்கு மூட்டைகளை இறக்க வந்தது.

சரக்கு வாகனத்தை பொங்கலூரை சேர்ந்த கணேசன் என்பவர் ஓட்டி வந்தார். பொங்கலூரில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை ஓரமாக வாகனத்தை நிறுத்திய ஓட்டுனர் பின்புறம் வாகனம் வருவதை அறியாமல் வலது புறம் திருப்பியுள்ளார்.



அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று சரக்கு வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சொகுசு காரில் வந்த திருச்சியைச் சேர்ந்த சம்சுதீன், ரியாஸ், ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.



சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த கணேசனும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இந்த விபத்தினை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அவினாசி பாளையம் காவல் துறையினருக்குத் தகவல் அளித்தனர்.

சம்பவ இடம் வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...