கோவை ரிலையன்ஸ் ஸ்மார்ட் பல்பொருள் அங்காடியில் ஆவின் பால் விலை ரூ.12 - பால் முகவர்கள் கண்டனம்…!

கோவையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவன அங்காடிகளில் அரை லிட்டர் ஆவின் பால் 22 ரூபாய்க்கு பதிலாக 12 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது, ஆவின் பால் முகவர்கள் சங்கத்தினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் ஆவின் பாலை, ரிலையன்ஸ் நிறுவனம் விலை குறைத்து விற்பனை செய்வதற்கு பால் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கோவை உட்பட தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் ஸ்மார்ட் பல்பொருள் அங்காடிகளில், விற்பனைக்காக ஆவின் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிர்வாகம் சார்பில், பால் லிட்டருக்கு 44 ரூபாய் முதல் 47 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், ரிலையன்ஸ் நிறுவன அங்காடிகளில் அரை லிட்டர் அவின் பாலை 22 ரூபாய்க்கு பதிலாக 12 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது, ஆவின் பால் முகவர்கள் சங்கத்தினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.



இது குறித்து கூறிய முகவர்கள், ரிலையன்ஸ் நிறுவனம் அதிக லாபம் பார்க்கும் நிறுவனம் என்பதால், பால் விலையை குறைவாக கொடுப்பதாகவும், இதனால் பொதுமக்கள் தங்களது நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்புவதாகவும் தெரிவித்தனர்.

எனவே, இது குறித்து ஆவின் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினசரி பெறப்படும் பால், விற்பனையாகாமல் இருந்தால், அவை சேதமாவதை தடுக்க இது போன்ற சலுகையை அறிவித்து, இரவு வரை விற்பனை செய்வதாக, ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...