கோவையில் உள்ள ரிலையன்ஸ் நிறுவன அங்காடிகளில் அரை லிட்டர் ஆவின் பால் 22 ரூபாய்க்கு பதிலாக 12 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது, ஆவின் பால் முகவர்கள் சங்கத்தினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் ஆவின் பாலை, ரிலையன்ஸ் நிறுவனம் விலை குறைத்து விற்பனை செய்வதற்கு பால் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கோவை உட்பட தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் ஸ்மார்ட் பல்பொருள் அங்காடிகளில், விற்பனைக்காக ஆவின் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிர்வாகம் சார்பில், பால் லிட்டருக்கு 44 ரூபாய் முதல் 47 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ரிலையன்ஸ் நிறுவன அங்காடிகளில் அரை லிட்டர் அவின் பாலை 22 ரூபாய்க்கு பதிலாக 12 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது, ஆவின் பால் முகவர்கள் சங்கத்தினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து கூறிய முகவர்கள், ரிலையன்ஸ் நிறுவனம் அதிக லாபம் பார்க்கும் நிறுவனம் என்பதால், பால் விலையை குறைவாக கொடுப்பதாகவும், இதனால் பொதுமக்கள் தங்களது நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்புவதாகவும் தெரிவித்தனர்.
எனவே, இது குறித்து ஆவின் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினசரி பெறப்படும் பால், விற்பனையாகாமல் இருந்தால், அவை சேதமாவதை தடுக்க இது போன்ற சலுகையை அறிவித்து, இரவு வரை விற்பனை செய்வதாக, ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை உட்பட தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் ஸ்மார்ட் பல்பொருள் அங்காடிகளில், விற்பனைக்காக ஆவின் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிர்வாகம் சார்பில், பால் லிட்டருக்கு 44 ரூபாய் முதல் 47 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால், ரிலையன்ஸ் நிறுவன அங்காடிகளில் அரை லிட்டர் அவின் பாலை 22 ரூபாய்க்கு பதிலாக 12 ரூபாய்க்கு விற்பனை செய்து வருவது, ஆவின் பால் முகவர்கள் சங்கத்தினர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கூறிய முகவர்கள், ரிலையன்ஸ் நிறுவனம் அதிக லாபம் பார்க்கும் நிறுவனம் என்பதால், பால் விலையை குறைவாக கொடுப்பதாகவும், இதனால் பொதுமக்கள் தங்களது நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுப்புவதாகவும் தெரிவித்தனர்.
எனவே, இது குறித்து ஆவின் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினசரி பெறப்படும் பால், விற்பனையாகாமல் இருந்தால், அவை சேதமாவதை தடுக்க இது போன்ற சலுகையை அறிவித்து, இரவு வரை விற்பனை செய்வதாக, ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.