சேரன் மாநகர் அருகே டாஸ்மாக் கடை திறக்கப்படாது: மக்கள் கோரிக்கையை ஏற்று அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு!

விளாங்குறிச்சி ரோடு சேரன்மாநகர் மக்கள் கோரிக்கையை ஏற்று, உடனடியாக அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறக்கக் கூடாது என அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை, விளாங்குறிச்சி ரோட்டில் அமைந்துள்ளது சேரன் மாநகர் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் குடியிருப்பு பகுதி. ஹோப் காலேஜ் முதல் விளாங்குறிச்சி வரை, இடைப்பட்ட பகுதிகளில் தற்போது செயல்பட்டு வரும் மதுபான கடைகளால் ஏற்கனவே மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில்,

பால்காரர் தோட்டம் பஸ் ஸ்டாப் அருகே புதிதாக டாஸ்மாக் மதுபான கடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த இந்த ரோட்டில் மீண்டும் ஒரு டாஸ்மாக் கடையா? என்று அதிர்ச்சியில் இருந்த அபப்குதி மக்கள், உடனடியாக டாஸ்மாக் மதுபான கடை அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்தனர்.

இதையடுத்து, 22வது வார்டு கவுன்சிலர் கோவை பாபு, பிரச்சனை குறித்து திமுக மாவட்ட செயலாளர் பையாகிருஷ்ணனிடம் தெரிவித்தார். இதையடுத்து, இருவரும் அமைச்சர் செந்தில் பாலாஜியியை நேரில் சந்தித்து பிரச்சனை குறித்து எடுத்துக் கூறினர்.

மக்கள் நலனை கருத்தில் கொண்டு, உடனடியாக அதிகாரிகளிடம் சம்பந்தப்பட்ட பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறக்கக் கூடாது எனஅமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

அமைச்சரின் இந்த உத்தரவால், விளாங்குறிச்சி பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...