கோவை துடியலூரில் கஞ்சா விற்பனை - 3.8 கிலோ கஞ்சா பறிமுதல்; இருவர் கைது

துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் திலக் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது, சந்தேகத்திற்கு இடமாக இடத்திற்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, அங்கு கஞ்சா இருந்தது தெரியவந்தது.


கோவை: கோவையில் கடந்த சில தினங்களாக கஞ்சா மற்றும் குட்கா விற்பனை தடுப்பு பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, கோவை துடியலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளக்கிணறு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் திலக் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, அங்கிருந்த இளைஞர்கள் இருவரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, அங்கு கஞ்சா இருந்தது தெரியவந்தது.

முதல்கட்ட விசாரணையில், பிடிப்பட்ட நபர்கள் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் (22) தேனி மாவட்டத்தை சேர்ந்த லோகேஸ்வரன் (22) என்பதும் அவர்கள் உள்ளூர் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3.8 கிலோ கஞ்சா மற்றும் 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...