துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் திலக் தலைமையிலான போலீசார் ஆய்வு மேற்கொண்ட போது, சந்தேகத்திற்கு இடமாக இடத்திற்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, அங்கு கஞ்சா இருந்தது தெரியவந்தது.
கோவை: கோவையில் கடந்த சில தினங்களாக கஞ்சா மற்றும் குட்கா விற்பனை தடுப்பு பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, கோவை துடியலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளக்கிணறு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் திலக் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கிருந்த இளைஞர்கள் இருவரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, அங்கு கஞ்சா இருந்தது தெரியவந்தது.
முதல்கட்ட விசாரணையில், பிடிப்பட்ட நபர்கள் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் (22) தேனி மாவட்டத்தை சேர்ந்த லோகேஸ்வரன் (22) என்பதும் அவர்கள் உள்ளூர் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3.8 கிலோ கஞ்சா மற்றும் 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
அதன்படி, கோவை துடியலூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வெள்ளக்கிணறு பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து துடியலூர் காவல் உதவி ஆய்வாளர் திலக் தலைமையிலான போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்கிருந்த இளைஞர்கள் இருவரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். இதனால், சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது, அங்கு கஞ்சா இருந்தது தெரியவந்தது.
முதல்கட்ட விசாரணையில், பிடிப்பட்ட நபர்கள் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் (22) தேனி மாவட்டத்தை சேர்ந்த லோகேஸ்வரன் (22) என்பதும் அவர்கள் உள்ளூர் இளைஞர்களை குறிவைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3.8 கிலோ கஞ்சா மற்றும் 2 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.