கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர், அழகு சுந்தரவல்லி தலைமையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர், அழகு சுந்தரவல்லி தலைமையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

மக்களுக்கு தேவையான பல்வேறு வேலைகள் செய்யப்படாமல் இருந்த நிலையில், அவற்றை விரைந்து முடிக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி வேலைகள் துவங்கப்பட்டுள்ளது. இன்று, நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் 21 வார்டுகளுக்கு, 83 வேலைகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், சாலை வசதி, மின்சார வசதி தெருவிளக்கு, நிழற்குடை வசதி, பொது மக்கள் குடியிருப்பு, பாதுகாப்பு சுவர், தடுப்பு சுவர், பள்ளி சத்துணவு மையம் பராமரித்தல் போன்ற வேலைகள் நகராட்சிக்கு வாகனம் வாங்குவதற்கு போன்ற பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 15 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

முன்னதாக, நகர்மன்ற கூட்டத்தில் ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களும், அவரவர் வார்டு பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான வசுது வாதிகள் குறித்து நகராட்சி அலுவலகத்தில் மனு வழங்கினர்.
இந்த மனுவை, நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் பார்வைக்கு வைக்கப்பட்டு, இதில் 83 பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வால்பாறையில் மொத்தம் 21 வார்டுகள் உள்ள நிலையில், அதில், 20 திமுக உறுப்பினர்கள் மற்றும் 1 அதிமுக உறுப்பினர் உள்ளனர். இந்த நிலையில், திமுக கட்சி அறிவிக்காத நகர்மன்றத் தலைவருக்கு சாதகமாக உள்ள வார்டு உறுப்பினர்களின் வார்டு பகுதியில் அதிகப்படியான வேலைகளையும், நகர்மன்ற தலைவர் சாதகமாக இல்லாதவர்களுக்கு குறைந்த வேலையும் கொடுப்பதாக குற்றம் சாட்டி, நகர்மன்ற கூட்டத்தில் சிறிது நேரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.

தற்போது, 83 பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், வரக்கூடிய நகர்மன்ற கூட்டத்தில் மக்களுக்குத் தேவையான வேலைகளை செய்து தர தீர்மானம் நிறைவேற்றப்படும், என்று நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.
மக்களுக்கு தேவையான பல்வேறு வேலைகள் செய்யப்படாமல் இருந்த நிலையில், அவற்றை விரைந்து முடிக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி வேலைகள் துவங்கப்பட்டுள்ளது. இன்று, நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் 21 வார்டுகளுக்கு, 83 வேலைகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில், சாலை வசதி, மின்சார வசதி தெருவிளக்கு, நிழற்குடை வசதி, பொது மக்கள் குடியிருப்பு, பாதுகாப்பு சுவர், தடுப்பு சுவர், பள்ளி சத்துணவு மையம் பராமரித்தல் போன்ற வேலைகள் நகராட்சிக்கு வாகனம் வாங்குவதற்கு போன்ற பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 15 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, நகர்மன்ற கூட்டத்தில் ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களும், அவரவர் வார்டு பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான வசுது வாதிகள் குறித்து நகராட்சி அலுவலகத்தில் மனு வழங்கினர்.
இந்த மனுவை, நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் பார்வைக்கு வைக்கப்பட்டு, இதில் 83 பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வால்பாறையில் மொத்தம் 21 வார்டுகள் உள்ள நிலையில், அதில், 20 திமுக உறுப்பினர்கள் மற்றும் 1 அதிமுக உறுப்பினர் உள்ளனர். இந்த நிலையில், திமுக கட்சி அறிவிக்காத நகர்மன்றத் தலைவருக்கு சாதகமாக உள்ள வார்டு உறுப்பினர்களின் வார்டு பகுதியில் அதிகப்படியான வேலைகளையும், நகர்மன்ற தலைவர் சாதகமாக இல்லாதவர்களுக்கு குறைந்த வேலையும் கொடுப்பதாக குற்றம் சாட்டி, நகர்மன்ற கூட்டத்தில் சிறிது நேரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
தற்போது, 83 பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், வரக்கூடிய நகர்மன்ற கூட்டத்தில் மக்களுக்குத் தேவையான வேலைகளை செய்து தர தீர்மானம் நிறைவேற்றப்படும், என்று நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.