வால்பாறை நகர்மன்ற கூட்டத்தில் ரூ.15.45 கோடி பணிகளுக்கு தீர்மானம் நிறைவேற்றம்

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர், அழகு சுந்தரவல்லி தலைமையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்ற தலைவர், அழகு சுந்தரவல்லி தலைமையில் இன்று நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



மக்களுக்கு தேவையான பல்வேறு வேலைகள் செய்யப்படாமல் இருந்த நிலையில், அவற்றை விரைந்து முடிக்க நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி வேலைகள் துவங்கப்பட்டுள்ளது. இன்று, நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் 21 வார்டுகளுக்கு, 83 வேலைகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில், சாலை வசதி, மின்சார வசதி தெருவிளக்கு, நிழற்குடை வசதி, பொது மக்கள் குடியிருப்பு, பாதுகாப்பு சுவர், தடுப்பு சுவர், பள்ளி சத்துணவு மையம் பராமரித்தல் போன்ற வேலைகள் நகராட்சிக்கு வாகனம் வாங்குவதற்கு போன்ற பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 15 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.



முன்னதாக, நகர்மன்ற கூட்டத்தில் ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களும், அவரவர் வார்டு பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தேவையான வசுது வாதிகள் குறித்து நகராட்சி அலுவலகத்தில் மனு வழங்கினர்.

இந்த மனுவை, நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி ஆணையர் பார்வைக்கு வைக்கப்பட்டு, இதில் 83 பணிகளுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வால்பாறையில் மொத்தம் 21 வார்டுகள் உள்ள நிலையில், அதில், 20 திமுக உறுப்பினர்கள் மற்றும் 1 அதிமுக உறுப்பினர் உள்ளனர். இந்த நிலையில், திமுக கட்சி அறிவிக்காத நகர்மன்றத் தலைவருக்கு சாதகமாக உள்ள வார்டு உறுப்பினர்களின் வார்டு பகுதியில் அதிகப்படியான வேலைகளையும், நகர்மன்ற தலைவர் சாதகமாக இல்லாதவர்களுக்கு குறைந்த வேலையும் கொடுப்பதாக குற்றம் சாட்டி, நகர்மன்ற கூட்டத்தில் சிறிது நேரத்தில் சலசலப்பு ஏற்பட்டது.



தற்போது, 83 பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், வரக்கூடிய நகர்மன்ற கூட்டத்தில் மக்களுக்குத் தேவையான வேலைகளை செய்து தர தீர்மானம் நிறைவேற்றப்படும், என்று நகர்மன்ற தலைவர் தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...