கொடநாடு வழக்கு - கோவையில் ஜெயலலிதா நேர்முக உதவியாளரிடம் நடந்த 9 மணி நேர விசாரணை நிறைவு

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் 18 ஆண்டுகளாக நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த பூங்குன்றனிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார், இன்று கோவையில் விசாரணை மேற்கொண்டனர்.


கோவை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக இது வரை 200க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் 18 ஆண்டுகளாக நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த பூங்குன்றனிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார், இன்று விசாரணை மேற்கொண்டனர்.

கோவை காவலர் பயிற்சி பள்ளியில் காலை 9.30 முதல் மாலை 6.30 மணி வரை சுமார் 9 மணி நேரம் நடந்த விசாரணையில், பூங்குன்றனிடம் பல்வேறு முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் என்பதால், கொடநாடு குறித்த முழு தகவல்களை தெரிந்தவர் என்பதால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.

அடுத்ததாக, சஜீவனின் தம்பி, சுனில் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில், மீண்டும் பூங்குன்றனை நாளையும் விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...