கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் 18 ஆண்டுகளாக நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த பூங்குன்றனிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார், இன்று கோவையில் விசாரணை மேற்கொண்டனர்.
கோவை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக இது வரை 200க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் 18 ஆண்டுகளாக நேர்முக உதவியாளராக பணியாற்றி வந்த பூங்குன்றனிடம் ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார், இன்று விசாரணை மேற்கொண்டனர்.
கோவை காவலர் பயிற்சி பள்ளியில் காலை 9.30 முதல் மாலை 6.30 மணி வரை சுமார் 9 மணி நேரம் நடந்த விசாரணையில், பூங்குன்றனிடம் பல்வேறு முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் என்பதால், கொடநாடு குறித்த முழு தகவல்களை தெரிந்தவர் என்பதால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.
அடுத்ததாக, சஜீவனின் தம்பி, சுனில் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில், மீண்டும் பூங்குன்றனை நாளையும் விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை காவலர் பயிற்சி பள்ளியில் காலை 9.30 முதல் மாலை 6.30 மணி வரை சுமார் 9 மணி நேரம் நடந்த விசாரணையில், பூங்குன்றனிடம் பல்வேறு முக்கிய கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவர், ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் என்பதால், கொடநாடு குறித்த முழு தகவல்களை தெரிந்தவர் என்பதால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது என்று கூறப்படுகிறது.
அடுத்ததாக, சஜீவனின் தம்பி, சுனில் என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையில், மீண்டும் பூங்குன்றனை நாளையும் விசாரணைக்கு வரும்படி அழைத்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.