இக்கூட்டத்தில், தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பன்றிகள் மற்றும் நாய்களை உடனடியாக பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
கோவை: பன்றிகள் மற்றும் நாய்களை உடனடியாக பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டல கூட்டம், குனியமுத்தூரில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் கோவை தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி தலைமையில் இன்று நடைபெற்றது.

கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள், தெற்கு மண்டல உதவி ஆணையர், உதவி பொறியாளர்கள், மற்றும் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாமன்ற உறுப்பினர்கள் கூறியதாவது:-
இக்கூட்டத்தில் ஜெயா நகரில் பூங்காவினை அமைக்கும் பணிகள் குறித்து தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, 86-வது வார்டில் நாய் கருத்தடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாய்களுக்கான 2 கருத்தடை மையம் மட்டுமே உள்ளது. நாய்கள் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. நாய்கள் மற்றும் பன்றிகளின் தொல்லை சரி செய்ய வேண்டும்.

தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பூங்காக்களைப் பராமரிக்க கூறியும், இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை போன்ற கேள்விகள் அரசு அதிகாரிகளிடம் மாமன்ற உறுப்பினர்களால் கேட்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, அதிகாரிகள் பதில்கள் எதுவும் கூறப்படாத நிலையில் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று 95-வது மாமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மக்களுக்கான பொது குழாய் மாமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் அமைக்கப்பட்டுள்ளது என்று 94-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

பன்றிகள் மற்றும் நாய்களை உடனடியாக பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தெற்கு மண்டல கூட்டம், குனியமுத்தூரில் உள்ள தெற்கு மண்டல அலுவலகத்தில் கோவை தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி தலைமையில் இன்று நடைபெற்றது.
கோவை மாநகராட்சியின் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட மாமன்ற உறுப்பினர்கள், தெற்கு மண்டல உதவி ஆணையர், உதவி பொறியாளர்கள், மற்றும் தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட அரசு அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து மாமன்ற உறுப்பினர்கள் கூறியதாவது:-
இக்கூட்டத்தில் ஜெயா நகரில் பூங்காவினை அமைக்கும் பணிகள் குறித்து தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, 86-வது வார்டில் நாய் கருத்தடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாய்களுக்கான 2 கருத்தடை மையம் மட்டுமே உள்ளது. நாய்கள் பிரச்சனை பெரும் பிரச்சனையாக உள்ளது. நாய்கள் மற்றும் பன்றிகளின் தொல்லை சரி செய்ய வேண்டும்.
தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட பூங்காக்களைப் பராமரிக்க கூறியும், இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை போன்ற கேள்விகள் அரசு அதிகாரிகளிடம் மாமன்ற உறுப்பினர்களால் கேட்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, அதிகாரிகள் பதில்கள் எதுவும் கூறப்படாத நிலையில் அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று 95-வது மாமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
மக்களுக்கான பொது குழாய் மாமன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாமல் அமைக்கப்பட்டுள்ளது என்று 94-வது வார்டு மாமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
பன்றிகள் மற்றும் நாய்களை உடனடியாக பிடிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு அதிகாரிகளுக்கு மேயர் உத்தரவிட்டார்.