சேலையில் தீ பிடித்து, உடல் முழுவதும் தீ பரவிய நிலையில் மூதாட்டியை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கோவை: கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அறிவொளி புதூர் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் இவரது மனைவி லட்சுமி (76). இவர் தனது மகள் ஜானகியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக உடல்நலக்குறைவால் லக்ஷ்மி, வீட்டில் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு லக்ஷ்மி படுத்து இருந்த இடத்தின் அருகே கொசுவர்த்தி சுருள் இருந்துள்ளது.
இதில், தெரியாமல் அவரது நைலான் துணி பட்டதில் தீப்பிடித்துள்ளது. இந்த தீ, உடல் முழுவதும் பரவிய நிலையில் லட்சுமி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து, அவரை மீட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
50 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட லட்சுமி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வருடமாக உடல்நலக்குறைவால் லக்ஷ்மி, வீட்டில் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு லக்ஷ்மி படுத்து இருந்த இடத்தின் அருகே கொசுவர்த்தி சுருள் இருந்துள்ளது.
இதில், தெரியாமல் அவரது நைலான் துணி பட்டதில் தீப்பிடித்துள்ளது. இந்த தீ, உடல் முழுவதும் பரவிய நிலையில் லட்சுமி சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர், தீயை அணைத்து, அவரை மீட்டு உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
50 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட லட்சுமி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.