ரயில்வே துறை வேலை: போலி ஆவணங்கள் கொடுத்து நூதன மோசடி - கோவையை சேர்ந்த நபர் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்….!

ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்கள் கொடுத்து, நூதன மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.



கோவை: ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்கள் கொடுத்து, நூதன மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்நதவர் ஶ்ரீஜித் (28). பி.டெக் பட்டதாரி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வேலை தேடி கோவை வந்துள்ளார். அப்போது, கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள (நியூ ஜாப் பிளேஸ்மென்ட் சர்வீஸ்) என்ற தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தை வேலை நிமித்தமாக சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த முருகா என்பவர் ரயில்வே துறை டிக்கெட் பரிசோதகர் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.6 லட்சம் செலவாகும், என கூறியுள்ளார். மேலும், ஶ்ரீஜித்தை நம்ப வைக்க, இவர் மூலம் வேலை கிடைத்தவர்கள் என சில ஆவணங்களை காண்பித்ததாக தெரிகிறது. இதை நம்பிய ஶ்ரீஜித், வெளியே கடன் வாங்கி ரூ.6 லட்சம் பணத்தை முருகாவிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து, சிறிது நாள் கழித்து, ஶ்ரீஜித்திற்க்கு கொல்கத்தாவில் வேலை கிடைத்துவிட்டதாகவும், பயிற்சி முடிந்தவுடன் பணியில் சேரலாம் எனக் கூறி கொல்கத்தாவிற்கு, அவரை முருகா அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றதும், மத்திய ரயில்வே துறையின் பணியானை மற்றும் அடையாள அட்டையை, ஶ்ரீஜித்திற்க்கு வழங்கியுள்ளார்.

இதையடுத்து, அங்கு தனியாக அறையெடுத்து தங்கிய நிலையில், தினமும் யாராவது ஒரு நபர் இவர்களது அறைக்கே வந்து ரயில்வே துறையில் பணியாற்றுவது தொடர்பாக பயிற்சி வழங்கியுள்ளனர். இதையடுத்து, நீண்ட நாட்களாக ஊதியமும், பணியில் சேராமலும், வருகை பதிவேட்டில் கையெழுத்து ஏதும் வாங்காததல் சந்தேகமடைந்த, ஶ்ரீஜித், இது குறித்து முருகாவிடம் விசாரித்துள்ளார்.

அப்போது அவர், தமிழகத்திற்கு பணிமாறுதல் செய்ய ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறி தொடர்ந்து ஶ்ரீஜித்தை ஏமாற்றியுள்ளார். மேலும், கிராம நிர்வாக அலுவலரிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என கூறி சொந்த ஊருக்கு அவரை அனுப்பியுள்ளார். ஆனால், அதற்கு பின் தொடர்பு கொண்ட போது முருகா போனை எடுக்காமல் வேண்டுமென்றே விலகி சென்றுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ஶ்ரீஜித் விழுப்புரம் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசார் அழைத்து விசாரித்த போது பணத்தை திரும்ப தருவதாக கூறியுள்ளார். அதன் பிறகு, சிறு தொகையை மட்டும் திருப்பி கொடுத்த நிலையில், மீண்டும் போனை எடுக்காமலும், பணத்தை கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, விசாரித்த போது அவர் ஏற்கனவே இதே போல் விழுப்புரத்தை சேர்ந்த மேலும் பலரிடம் ரூ.10 லட்சம் முதல் ரூ.11 லட்சம் வாங்கி ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அனைவரும் கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதில், மத்திய ரயில்வே வேலை எனக் கூறி போலியாக பணியாணை, அடையாள அட்டை உள்ளிட்ட வழங்கி மோசடியில் ஈடுபட்ட முருகா என்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும், என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதே போல், விழுப்புரத்தை சேர்ந்த பெண்ணிடமும் மத்திய அரசு மருத்துவமனையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4.5 லட்சம் மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்ணும் தனது குழந்தையுடன் வந்து மனு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...