கோவை பேரூரில் நடந்த 'முப்பெரும் விழா' - தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு..!

பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற சுபகிருது ஆண்டு பிறப்பு, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள், 75-ஆம் ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழா என்ற முப்பெரும் விழாவில் தெலுங்கானா மாநில ஆளுநர் கலந்து கொண்டார்.



கோவை: கோவை பேரில் நடந்த முப்பெரும் விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டார்.

கோவை பேரூர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற சுபகிருது ஆண்டுப்பிறப்பு, அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள், 75 ஆம் ஆண்டு சுதந்திர தின அமுதப் பெருவிழா என்ற முப்பெரும் விழாவில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டுள்ளார்.



இதில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், கெளமார மடாலயம் குமரகுருபர அடிகளார் ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். முன்னதாக பேரூர் வந்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு காவல்துறை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இதையடுத்து நிகழ்ச்சியில் பேசிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும் போது:-



தமிழ் வணக்கம் என்று கூறி உரையைத் துவக்கினார். தமிழ் என்ற அழைப்பு வரும் போது தமிழிசை அங்கே இருப்பேன் என தெரிவித்த அவர், ஒரு ராமசாமி மட்டும் தமிழர்களுக்கும், தமிழுக்கும் தொண்டு செய்யவில்லை. இங்கே உள்ள சாந்தலிங்க ராமசாமி அடிகளாரும் தமிழுக்கு தொண்டாற்றி உள்ளார்.

அதே போல் 75 -ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை ஓராண்டு கொண்டாட உத்தரவிட்ட பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். ஆன்மீகம் தான் தமிழ் வளர்ச்சிக்கு உதவியது என கூறிய அவர் எல்லா மடங்களுக்கும் செல்லும் பழக்கம் எனக்கு இருக்கிறது.

அங்கு என்ன பழக்கங்கள் இருக்கிறதோ அதை நான் ஏற்றுக் கொள்வேன் என தெரிவித்தார். ஆனால் இதை மாற்றி எழுதுகின்றனர். தமிழிசை செல்லும் இடத்தில் திரித்து எழுதுகின்றனர். என் மனதில் இருப்பது மக்கள் சேவை, ஆன்மீக சேவை மட்டுமே, கருத்தைமட்டுமே பேசுபவர்கள், காவியின் கருத்தையும்அறிய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது.



அரசு மடாலயங்களை அழைத்து பேசும் போது, அவர்களுக்கு உரிய இருக்கைகளை அமைத்து கொடுக்க வேண்டும். காவி ஆன்மீகத்தை குறிக்கிறது. அதனால் தான் காவி தமிழகத்தில் பெரியது, நம்மால் முடிந்ததை ஆதீனங்களுக்கு செல்வமாக, தானமாக வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

நான் ஒரு நேர்மையான அரசியல்வாதி, பணமதிப்பிழப்பின் போது எந்த பிரச்னையும் வரவில்லை, மோடி எங்களுக்கு சொல்லவுமில்லை. எங்களிடம் கருப்பு பணமும் இல்லை என தெரிவித்தார்.

மடாலயங்கள் மூலமாக நடத்தப்படும் கல்வி நிலையங்களுக்கு சிறப்பு கவனத்தை அரசு செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்த அவர் அப்போது தான் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவ முடியும் என தெரிவித்தார்.

ஆளுநர்களுக்கு ஆளுமை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனாலும் ஆளுநர்களும் சாமானிய மக்களில் ஒருவர் தான் என தெரிவித்தார்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...