இதையடுத்து அங்கு வந்த சூலூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவை: கோவை சூலூர் அருகே சாலையில் சென்ற இருசக்கர வாகனம் நிலை தடுமாறி விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் காளியப்பன் (25). இவர் கோவை கோவில்பாளையத்தில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவர் தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டு மீண்டும் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி வந்துள்ளார்.
அப்போது சூலூர் ரங்கநாதபுரம் அருகே வந்தபோது சாலையில் இருந்த பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கி உள்ளார். இதில் இரு சக்கர வாகனம் பள்ளத்தில் இறங்கியதில் நிலை தடுமாறி விழுந்த அவர் மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து ஏறியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காளியப்பன் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அங்கு வந்த சூலூர் போலீசார் காளியப்பன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் காளியப்பன் (25). இவர் கோவை கோவில்பாளையத்தில் உள்ள பழக்கடையில் வேலை பார்த்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அவர் தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டு மீண்டும் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் கோவை நோக்கி வந்துள்ளார்.
அப்போது சூலூர் ரங்கநாதபுரம் அருகே வந்தபோது சாலையில் இருந்த பள்ளம் தெரியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கி உள்ளார். இதில் இரு சக்கர வாகனம் பள்ளத்தில் இறங்கியதில் நிலை தடுமாறி விழுந்த அவர் மீது பின்னால் வந்த அரசுப் பேருந்து ஏறியது.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காளியப்பன் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அங்கு வந்த சூலூர் போலீசார் காளியப்பன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.