கோவையில் இருந்து சென்னைக்கு பாத யாத்திரை: காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவிப்பு!

கோவை பெரியகடை வீதியில் உள்ள மார்க்கெட் பகுதியில் உள்ள டெண்டர் கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பினர் பாத யாத்திரை செல்ல முடிவு செய்துள்ளனர்.


கோவை: கோவை பெரிய கடை வீதியில் செயல்பட்டு வரும் டி.கே.மார்க்கெட் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக சாலையோர கடைகளை அமைத்து சிறு வியாபாரிகள் காய்கறி பழங்கள் வியாபாரம் செய்து வந்தனர்.

ஆனால், சாலையோர கடைகள் செயல்பபட, மார்க்கெட்டில் கடைகள் ஏலம் எடுத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததையடுத்து, அப்பகுதியில், காலியாக இருந்த இடத்தில் கடைகள் அமைத்து தருவதாக முந்தைய அதிமுக ஆட்சியின் போது உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், கடைகளை வியாபாரிகளுக்கு வழங்குவதற்கு முன்பு, தேர்தல் அறிவிக்கப்பட்டு ஆட்சி மாற்றம் நடைபெற்றதால், கோவை மாநகராட்சி சார்பில் அக்கடைகளை டெண்டர் மூலம் எடுக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.



இதுகுறித்து, கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த காய்கறி சிறு வியாபாரிகள் கூட்டமைப்பினர், ஓராண்டாக தொழில் செய்ய முடியாமல் 88 வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குடும்பத்தினர் சிரமத்திற்கு உள்ளாகி வருவதால், டெண்டர் கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். மேலும், இது தொடர்பாக, மாநகராட்சி ஆணையரை சந்திக்க சென்ற போது, ஆணையர் அவதூறாக பேசி தங்களை வெளியேற்றியதாக குற்றம் சாட்டினர்.



எனவே, கடைகளை தங்களுக்கு ஒதுக்க கோரி வருகிற மே மாதம் 5ம் தேதி கோவை அண்ணா சாலையிலிருந்து, சென்னை அண்ணா சமாதிக்கு, குடும்பத்தினருடன் பாத யாத்திரையாக சென்று முதலமைச்சரிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.



முன்னதாக வரும் 30ம் தேதி கோவையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...