கோவையில் காணாமல் போன சிறுவனைக் கண்டுப் பிடித்த காவலருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!

வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காணாமல் போன 12 வயது சிறுவனை கண்டுபிடித்த காவலரின் திறன்மிகு செயலை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவருக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளார்.


கோவை: கோவையில் காணாமல் போன 12 வயது சிறுவனைக் கண்டுப் பிடித்துக் கொடுத்த காவலருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுவன் செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் கடந்த 13ம் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வராததால், வடவள்ளி காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர்.

புகாரின் அடிப்படையில், துரிதமாக செயல்பட்டு மதுரையில் இருந்த சிறுவனை மீட்ட முதல் நிலை காவலர் கோட்டை சேகரின் (GrI 1186) திறன்மிகு செயலை பாராட்டும் விதமாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இச்செயல் மற்ற காவலர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக, காவலர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...