வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காணாமல் போன 12 வயது சிறுவனை கண்டுபிடித்த காவலரின் திறன்மிகு செயலை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவருக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்துள்ளார்.
கோவை: கோவையில் காணாமல் போன 12 வயது சிறுவனைக் கண்டுப் பிடித்துக் கொடுத்த காவலருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுவன் செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் கடந்த 13ம் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வராததால், வடவள்ளி காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர்.
புகாரின் அடிப்படையில், துரிதமாக செயல்பட்டு மதுரையில் இருந்த சிறுவனை மீட்ட முதல் நிலை காவலர் கோட்டை சேகரின் (GrI 1186) திறன்மிகு செயலை பாராட்டும் விதமாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இச்செயல் மற்ற காவலர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக, காவலர்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம், வடவள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுவன் செல்போனில் கேம் விளையாடியதை பெற்றோர் கண்டித்ததால் கடந்த 13ம் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றவர் வெகு நேரமாகியும் வராததால், வடவள்ளி காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் கொடுத்தனர்.
புகாரின் அடிப்படையில், துரிதமாக செயல்பட்டு மதுரையில் இருந்த சிறுவனை மீட்ட முதல் நிலை காவலர் கோட்டை சேகரின் (GrI 1186) திறன்மிகு செயலை பாராட்டும் விதமாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இச்செயல் மற்ற காவலர்களின் திறமையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக, காவலர்கள் தெரிவித்தனர்.