கொடிசியா உள்ளிட்ட ஒன்பது தொழில் அமைப்புகளின் தலைவர்கள் இன்று டில்லி சென்று அமைச்சர்களைச் சந்தித்து மூலப்பொருள் விலை உயர்வு குறித்த கோரிக்கைகளை நேரில் எடுத்துரைக்க உள்ளனர்.
கோவை: தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கோவை தொழில் அமைப்புகளின் தலைவர்கள் டில்லி பயணம் மேற்கொண்டு உள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்ட கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு கூறியுள்ளதாவது:-

தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் கடமையாக பாதிக்கப்பட்டு தொழிலைக் கைவிடும் நிலையில் உள்ளன.
மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டுத் தீர்வு காணாவிட்டால், பல தொழிற்சாலைகள் மூடப்படும் சிக்கல் எழுந்துள்ளது. இயல்புக்கு மாறாக அளவு கடந்து உயர்ந்து வரும் மூலப்பொருட்களின் விலை காரணமாக, தொழிற்சாலைகளின் ஆர்டர்கள் கேன்சலாவது, சந்தையில் நிச்சயமற்ற தன்மை, குறைந்து வரும் ஏற்றுமதி, தொழிற்சாலைகள் மூடல் என பல சிக்கல்கள் உருவாகி வருகின்றன.
இந்த நிலையில் நாராயண் டி ரானே, மத்திய சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறை அமைச்சர், ராம் சந்திர பிரசாத் சிங், மத்திய உருக்குத்துறை அமைச்சர் மற்றும் பியூஷ் கோயல், மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் ஆகியோரை கோவையில் உள்ள தொழில் அமைப்புகள் தனித்தனியாகவும், இணைந்தும் இதுகுறித்து கடிதங்கள் எழுதியும், கோரிக்கை வைத்தும் வந்தனர்.
மேலும், நேரில் சந்தித்து முறையிடுவதற்கும் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நேரில் சந்திக்க அனுமதி தற்போது கிடைத்துள்ளதால், கொடிசியா உள்ளிட்ட ஒன்பது தொழில் அமைப்புகளின் தலைவர்கள் இன்று டில்லி சென்று அமைச்சர்களைச் சந்தித்து மூலப்பொருள் விலை உயர்வு குறித்த கோரிக்கைகளை நேரில் எடுத்துரைக்க உள்ளனர்.
இந்த மூலப்பொருள் விலை உயர்வு குறித்த சிக்கலுக்கு விரைந்து தீர்வுகாண, துறை சார்ந்த அமைச்சர்கள் ஆவன செய்வார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






இதுகுறித்து கோவை மாவட்ட கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு கூறியுள்ளதாவது:-
தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் கடமையாக பாதிக்கப்பட்டு தொழிலைக் கைவிடும் நிலையில் உள்ளன.
மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டுத் தீர்வு காணாவிட்டால், பல தொழிற்சாலைகள் மூடப்படும் சிக்கல் எழுந்துள்ளது. இயல்புக்கு மாறாக அளவு கடந்து உயர்ந்து வரும் மூலப்பொருட்களின் விலை காரணமாக, தொழிற்சாலைகளின் ஆர்டர்கள் கேன்சலாவது, சந்தையில் நிச்சயமற்ற தன்மை, குறைந்து வரும் ஏற்றுமதி, தொழிற்சாலைகள் மூடல் என பல சிக்கல்கள் உருவாகி வருகின்றன.
இந்த நிலையில் நாராயண் டி ரானே, மத்திய சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறை அமைச்சர், ராம் சந்திர பிரசாத் சிங், மத்திய உருக்குத்துறை அமைச்சர் மற்றும் பியூஷ் கோயல், மத்திய வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் ஆகியோரை கோவையில் உள்ள தொழில் அமைப்புகள் தனித்தனியாகவும், இணைந்தும் இதுகுறித்து கடிதங்கள் எழுதியும், கோரிக்கை வைத்தும் வந்தனர்.
மேலும், நேரில் சந்தித்து முறையிடுவதற்கும் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அந்த வகையில் நேரில் சந்திக்க அனுமதி தற்போது கிடைத்துள்ளதால், கொடிசியா உள்ளிட்ட ஒன்பது தொழில் அமைப்புகளின் தலைவர்கள் இன்று டில்லி சென்று அமைச்சர்களைச் சந்தித்து மூலப்பொருள் விலை உயர்வு குறித்த கோரிக்கைகளை நேரில் எடுத்துரைக்க உள்ளனர்.
இந்த மூலப்பொருள் விலை உயர்வு குறித்த சிக்கலுக்கு விரைந்து தீர்வுகாண, துறை சார்ந்த அமைச்சர்கள் ஆவன செய்வார்கள் என நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.