மூலப்பொருள்‌ விலை உயர்வை‌ கட்டுப்படுத்த‌ கோரி கோவை தொழில்‌ அமைப்புகளின்‌ தலைவர்கள்‌ டில்லி பயணம்‌..!

கொடிசியா உள்ளிட்ட ஒன்பது தொழில்‌ அமைப்புகளின்‌ தலைவர்கள்‌ இன்று டில்லி சென்று அமைச்சர்களைச்‌ சந்தித்து மூலப்பொருள்‌ விலை உயர்வு குறித்த கோரிக்கைகளை நேரில்‌ எடுத்துரைக்க உள்ளனர்‌.


கோவை: தொழிற்சாலைகளுக்குத்‌ தேவையான மூலப்பொருட்களின்‌ விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால்‌, விலை உயர்வை‌ கட்டுப்படுத்த‌ கோரி கோவை தொழில்‌ அமைப்புகளின்‌ தலைவர்கள்‌ டில்லி பயணம் மேற்கொண்டு உள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு கூறியுள்ளதாவது:-



தொழிற்சாலைகளுக்குத்‌ தேவையான மூலப்பொருட்களின்‌ விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால்‌, சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழிற்சாலைகள்‌ கடமையாக பாதிக்கப்பட்டு தொழிலைக்‌ கைவிடும்‌ நிலையில்‌ உள்ளன.

மத்திய அரசு உடனடியாக இதில்‌ தலையிட்டுத் தீர்வு காணாவிட்டால்‌, பல தொழிற்சாலைகள்‌ மூடப்படும்‌ சிக்கல்‌ எழுந்துள்ளது. இயல்புக்கு மாறாக அளவு கடந்து உயர்ந்து வரும்‌ மூலப்பொருட்களின்‌ விலை காரணமாக, தொழிற்சாலைகளின்‌ ஆர்டர்கள்‌ கேன்சலாவது, சந்தையில்‌ நிச்சயமற்ற தன்மை, குறைந்து வரும்‌ ஏற்றுமதி, தொழிற்சாலைகள்‌ மூடல்‌ என பல சிக்கல்கள்‌ உருவாகி வருகின்றன.

இந்த நிலையில்‌ நாராயண்‌ டி ரானே, மத்திய சிறு குறு மற்றும்‌ நடுத்தரத்‌ தொழிற்துறை அமைச்சர்‌, ராம்‌ சந்திர பிரசாத்‌ சிங்‌, மத்திய உருக்குத்துறை அமைச்சர்‌ மற்றும்‌ பியூஷ்‌ கோயல்‌, மத்திய வணிகம்‌ மற்றும்‌ தொழிற்துறை அமைச்சர்‌ ஆகியோரை கோவையில்‌ உள்ள தொழில்‌ அமைப்புகள் தனித்தனியாகவும்‌, இணைந்தும்‌ இதுகுறித்து கடிதங்கள்‌ எழுதியும்‌, கோரிக்கை வைத்தும்‌ வந்தனர்‌.

மேலும்‌, நேரில்‌ சந்தித்து முறையிடுவதற்கும்‌ அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அந்த வகையில்‌ நேரில்‌ சந்திக்க அனுமதி‌ தற்போது கிடைத்துள்ளதால்‌, கொடிசியா உள்ளிட்ட ஒன்பது தொழில்‌ அமைப்புகளின்‌ தலைவர்கள்‌ இன்று டில்லி சென்று அமைச்சர்களைச்‌ சந்தித்து மூலப்பொருள்‌ விலை உயர்வு குறித்த கோரிக்கைகளை நேரில்‌ எடுத்துரைக்க உள்ளனர்‌.

இந்த மூலப்பொருள்‌ விலை உயர்வு குறித்த சிக்கலுக்கு விரைந்து தீர்வுகாண, துறை சார்ந்த அமைச்சர்கள்‌ ஆவன செய்வார்கள்‌ என நம்புகிறோம்‌.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.











Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...