தமிழ்நாடு குறவன், மலைக்குறவன் மற்றும் குறவர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் குறிஞ்சியர் சமூகநீதி பேரவை சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: சாதி சான்றிதழ் வழங்கும் போது, தங்களது சாதியை சரிவர குறிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு குறவன், மலைக்குறவன் மற்றும் குறவர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் குறிஞ்சியர் சமூகநீதி பேரவை சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசு சாதி சான்றிதழ்கள் வழங்கும் போது "குருவிக்காரன்" சாதி மக்களுக்கு "நரிக்குறவர்" என குறிப்பிடுவதாகவும், நரிக்குறவர் வேறு தாங்கள் வேறு என்பதால் தங்களுக்கு வழங்கப்படும் சாதி சான்றிதழ்களில் "குருவிக்காரன்" அல்லது "நக்காலா"(இராஜதானியின் அடிப்படையில்) என குறிப்பிட்டு தர வேண்டுமென வலியுறுத்தினர்.

குருவிக்காரர்களை, குறவன் என குறிப்பிடுவதால் இரு சமூகத்தினருக்கு அவ்வப்போது மோதல்கள் நிகழ்வதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

ஆர்பாட்டத்தில கலந்து கொண்ட 20க்கும் மேற்பட்டோர் அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். எனவே, தமிழக அரசு தங்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
தமிழக அரசு சாதி சான்றிதழ்கள் வழங்கும் போது "குருவிக்காரன்" சாதி மக்களுக்கு "நரிக்குறவர்" என குறிப்பிடுவதாகவும், நரிக்குறவர் வேறு தாங்கள் வேறு என்பதால் தங்களுக்கு வழங்கப்படும் சாதி சான்றிதழ்களில் "குருவிக்காரன்" அல்லது "நக்காலா"(இராஜதானியின் அடிப்படையில்) என குறிப்பிட்டு தர வேண்டுமென வலியுறுத்தினர்.
குருவிக்காரர்களை, குறவன் என குறிப்பிடுவதால் இரு சமூகத்தினருக்கு அவ்வப்போது மோதல்கள் நிகழ்வதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
ஆர்பாட்டத்தில கலந்து கொண்ட 20க்கும் மேற்பட்டோர் அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். எனவே, தமிழக அரசு தங்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.