'நரிக்குறவர்' வேறு, 'குருவிக்காரன்' வேறு, சாதி சான்றிதழில் தங்கள் சாதியை சரியாக குறிப்பிட வேண்டி கோவையில் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாடு குறவன், மலைக்குறவன் மற்றும் குறவர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் குறிஞ்சியர் சமூகநீதி பேரவை சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: சாதி சான்றிதழ் வழங்கும் போது, தங்களது சாதியை சரிவர குறிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழ்நாடு குறவன், மலைக்குறவன் மற்றும் குறவர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு மற்றும் குறிஞ்சியர் சமூகநீதி பேரவை சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



தமிழக அரசு சாதி சான்றிதழ்கள் வழங்கும் போது "குருவிக்காரன்" சாதி மக்களுக்கு "நரிக்குறவர்" என குறிப்பிடுவதாகவும், நரிக்குறவர் வேறு தாங்கள் வேறு என்பதால் தங்களுக்கு வழங்கப்படும் சாதி சான்றிதழ்களில் "குருவிக்காரன்" அல்லது "நக்காலா"(இராஜதானியின் அடிப்படையில்) என குறிப்பிட்டு தர வேண்டுமென வலியுறுத்தினர்.



குருவிக்காரர்களை, குறவன் என குறிப்பிடுவதால் இரு சமூகத்தினருக்கு அவ்வப்போது மோதல்கள் நிகழ்வதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



ஆர்பாட்டத்தில கலந்து கொண்ட 20க்கும் மேற்பட்டோர் அவர்களது கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். எனவே, தமிழக அரசு தங்கள் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...