கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டு சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய காட்டு யானை; பீதியில் மக்கள்

கோவையில் முத்தி பாளையம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளிவிட்டு தென்னந்தோப்புக்குள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அங்குள்ள வீட்டு சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அருகே முத்திபாளையம், அருள் ஜோதி நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் வனத்தை விட்டு வெளியே வந்த, காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, அங்குள்ள வீதிகளில் சுற்றி திரிந்தது.

யானையை பார்த்த தெரு நாய்கள், குறைத்து சத்தம் போட்டது. இதனால், சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் வெளியில் வந்து பார்த்த போது, தெருவில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்ததை பார்த்துள்ளனர்.

யானையின் நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்கள் ஒருவருக்கொருவர் போன் செய்து யானையை தாங்களாகவே விரட்ட முடிவு செய்தனர். அதன்படி, மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், யானை அங்கிருந்து செல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் நின்றது.

பின்னர், அங்கிருந்து வனத்தை நோக்கி சென்ற யானை செல்லும் வழியில் கௌசல்யா என்பவரது வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளி அருகே இருந்த தென்னந்தோப்புக்குள் நுழைந்து மறைந்தது.

இதற்கிடையே, தகவல் அறிந்து அங்கே வந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், எவ்வளவு நேரம் தேடியும் யார் கண்களுக்கும் யானை தென்படவில்லை. தற்போது, கோடை காலம் என்பதால், நீரை தேடி வனத்தை விட்டு ஊருக்குள் யானைகள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளது. இதனால், மலை மற்றும் வனப்பகுதி அருகே வாழும் மக்கள், இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் வெளியே வர வேண்டும், என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...