கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டு சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய காட்டு யானை; பீதியில் மக்கள்

கோவையில் முத்தி பாளையம் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று வீட்டின் சுற்றுச்சுவரை இடித்து தள்ளிவிட்டு தென்னந்தோப்புக்குள் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த காட்டு யானை ஒன்று அங்குள்ள வீட்டு சுற்றுச்சுவரை இடித்து தள்ளிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை தொண்டாமுத்தூர் அருகே முத்திபாளையம், அருள் ஜோதி நகர் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் வனத்தை விட்டு வெளியே வந்த, காட்டு யானை ஒன்று குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து, அங்குள்ள வீதிகளில் சுற்றி திரிந்தது.

யானையை பார்த்த தெரு நாய்கள், குறைத்து சத்தம் போட்டது. இதனால், சந்தேகமடைந்த குடியிருப்புவாசிகள் வெளியில் வந்து பார்த்த போது, தெருவில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றித் திரிந்ததை பார்த்துள்ளனர்.

யானையின் நடமாட்டம் குறித்து அப்பகுதி மக்கள் ஒருவருக்கொருவர் போன் செய்து யானையை தாங்களாகவே விரட்ட முடிவு செய்தனர். அதன்படி, மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும், யானை அங்கிருந்து செல்லாமல் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஒரே இடத்தில் நின்றது.

பின்னர், அங்கிருந்து வனத்தை நோக்கி சென்ற யானை செல்லும் வழியில் கௌசல்யா என்பவரது வீட்டின் காம்பவுண்ட் சுவரை இடித்து தள்ளி அருகே இருந்த தென்னந்தோப்புக்குள் நுழைந்து மறைந்தது.

இதற்கிடையே, தகவல் அறிந்து அங்கே வந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யானையை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், எவ்வளவு நேரம் தேடியும் யார் கண்களுக்கும் யானை தென்படவில்லை. தற்போது, கோடை காலம் என்பதால், நீரை தேடி வனத்தை விட்டு ஊருக்குள் யானைகள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளது. இதனால், மலை மற்றும் வனப்பகுதி அருகே வாழும் மக்கள், இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் வெளியே வர வேண்டும், என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...