சிறுவாணி அணை விவகாரம்: முதல்வர் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை - மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா பேட்டி..!

தினந்தோறும் 9 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 4.5 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே எடுக்கப்பட்டு வருவதால், தமிழக முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக துணை ஆணையர் தெரிவித்தார்.


கோவை: கேரள மாநிலம் சிறுவாணி அணையில் இருந்து கோவை மாநகராட்சிக்கு தினந்தோறும் 9 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 4.5 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே எடுக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து தமிழக முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கோவை மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா தெரிவித்தார்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களை ஊக்குவிக்கும் திட்டத்தில் ரூ2.5 கோடி மதிப்பீட்டில் கோவை மாநகராட்சியின் 17-வது வார்டுக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், சேரன் நகர் பகுதியில் 400 வீடுகளுக்கு முதற்கட்டமாக இத்திட்டத்தின் கீழ் 24 மணி நேர குடிநீர் விநியோக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

இது தொடர்பாக பேட்டியளித்த மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா,

2.5 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசும், மாநகராட்சியும் பி.எஸ்.ஜி நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன எனவும், முதல்கட்டமாக 400 வீடுகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது எனவும் திட்டத்தின் செயல்பாட்டை பொறுத்து படிப்படியாக விரிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கு சூயஸ் நிறுவனம் மூலம் 24 மணி நேரம் தண்ணீர் வழங்கப் பட திட்டம் செயல்படுத்த படுகின்றது என்றும் சூயஸ் திட்டம் இல்லாத பகுதியில் 24 மணி நேரம் தண்ணீர் விநியோகம் செய்ய பைலட் திட்டம் செயல்படுத்த சோதனை அடிப்படையில் முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சிறுவாணி அணையில் இருந்து தினந்தோறும் 9 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில் , இப்போது 4.5 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து தமிழக முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் துணை ஆணையர் சர்மிளா தெரிவித்தார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...