சிறுவாணி அணை விவகாரம்: முதல்வர் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை - மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா பேட்டி..!

தினந்தோறும் 9 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 4.5 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே எடுக்கப்பட்டு வருவதால், தமிழக முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக துணை ஆணையர் தெரிவித்தார்.


கோவை: கேரள மாநிலம் சிறுவாணி அணையில் இருந்து கோவை மாநகராட்சிக்கு தினந்தோறும் 9 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில், இப்போது 4.5 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே எடுக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்து தமிழக முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் கோவை மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா தெரிவித்தார்.

மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களை ஊக்குவிக்கும் திட்டத்தில் ரூ2.5 கோடி மதிப்பீட்டில் கோவை மாநகராட்சியின் 17-வது வார்டுக்கு உட்பட்ட கவுண்டம்பாளையம், சேரன் நகர் பகுதியில் 400 வீடுகளுக்கு முதற்கட்டமாக இத்திட்டத்தின் கீழ் 24 மணி நேர குடிநீர் விநியோக இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. அதனை மேயர் கல்பனா ஆனந்தகுமார் துவக்கி வைத்தார்.

இது தொடர்பாக பேட்டியளித்த மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா,

2.5 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசும், மாநகராட்சியும் பி.எஸ்.ஜி நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன எனவும், முதல்கட்டமாக 400 வீடுகளுக்கு 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது எனவும் திட்டத்தின் செயல்பாட்டை பொறுத்து படிப்படியாக விரிவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கு சூயஸ் நிறுவனம் மூலம் 24 மணி நேரம் தண்ணீர் வழங்கப் பட திட்டம் செயல்படுத்த படுகின்றது என்றும் சூயஸ் திட்டம் இல்லாத பகுதியில் 24 மணி நேரம் தண்ணீர் விநியோகம் செய்ய பைலட் திட்டம் செயல்படுத்த சோதனை அடிப்படையில் முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

சிறுவாணி அணையில் இருந்து தினந்தோறும் 9 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு வந்த நிலையில் , இப்போது 4.5 கோடி லிட்டர் தண்ணீர் மட்டுமே தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து தமிழக முதல்வர் தலைமையிலான உயர்மட்ட குழு கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் துணை ஆணையர் சர்மிளா தெரிவித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...