தனியார் கறிக்கோழி நிறுவனங்களின் முறையற்ற செயல்பாடுகளை கண்டித்து வருகிற 29-ம் தேதி மாநிலம் தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக விவசாய கறிக்கோழி வளர்ப்போர் பணியாளர்கள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கோவை: விவசாயிகள் கறிக்கோழி வளர்ப்போர் பணியாளர்கள் சங்கத்தினர் தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்கள் நியாயமற்ற செயல்பாடுகளில் ஈடுப்பட்டு வருவதாக கூறி அதனை கண்டித்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்திருந்தனர்.

அவர்கள் அளித்த மனுவில் கடந்த இரு ஆண்டுகளாக தேங்காய் மஞ்சி, கறி முட்டை போன்ற இடுபொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் வேலையாட்களின் கூலி உயர்வாலும் தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்களின் முறைப்படுத்தப்படாத குறைந்தபட்ச இருப்பு தொகை மற்றும் அடுக்கு விகிதம், தரமற்ற தீவனம் போன்ற காரணங்களால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.

மேலும், கோழி வளர்ப்பு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பான BCC அமைப்பிற்குக் கடந்த ஆறு மாத காலங்களாகப் பதிவு கடிதம் மின்னஞ்சல் அனுப்பியும் நேரில் சென்று கோரிக்கை கடிதங்கள் வழங்கியும் தீர்வு கிட்டாத நிலையில் தனியார் கறிக்கோழி நிறுவனங்களின் முறையற்ற செயல்பாடுகளைக் கண்டித்து வருகின்ற 29ம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகக் குறிப்பிட்டு இருந்தனர்.
அவர்கள் அளித்த மனுவில் கடந்த இரு ஆண்டுகளாக தேங்காய் மஞ்சி, கறி முட்டை போன்ற இடுபொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் வேலையாட்களின் கூலி உயர்வாலும் தனியார் கோழி வளர்ப்பு நிறுவனங்களின் முறைப்படுத்தப்படாத குறைந்தபட்ச இருப்பு தொகை மற்றும் அடுக்கு விகிதம், தரமற்ற தீவனம் போன்ற காரணங்களால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்து உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், கோழி வளர்ப்பு நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு அமைப்பான BCC அமைப்பிற்குக் கடந்த ஆறு மாத காலங்களாகப் பதிவு கடிதம் மின்னஞ்சல் அனுப்பியும் நேரில் சென்று கோரிக்கை கடிதங்கள் வழங்கியும் தீர்வு கிட்டாத நிலையில் தனியார் கறிக்கோழி நிறுவனங்களின் முறையற்ற செயல்பாடுகளைக் கண்டித்து வருகின்ற 29ம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகக் குறிப்பிட்டு இருந்தனர்.