கோவை விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து 40-சதவீதமும், கார்கோ போக்குவரத்து 10-சதவீதமும் உயர்வு..!

கடந்த 2021-மார்ச் மாதத்துடன் இந்த ஆண்டு ஒப்பிடுகையில் பயணிகள் போக்குவரத்து 40-சதவீதமும், கார்கோ போக்குவரத்து 10-சதவீதமும் அதிகரித்துள்ளது.


கோவை:கோவை சர்வதேச விமான நிலையத்தில் பல மாதங்களுக்கு பிறகு தினசரி இயக்கப்படும் விமானங்கள், பயணிகள் எண்ணிக்கை மற்றும் மாதம்தோறும் கையாளப்படும் கார்கோ அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2022-மார்ச் மாதத்தில் சர்வதேச போக்குவரத்து பிரிவில், மொத்தம் 10,214-பயணிகளும் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 1,70,436-பயணிகள் என மொத்தம் 1,80,650- பேர் பயன்படுத்தியுள்ளனர்.

கார்கோ போக்குவரத்தில் சர்வதேச போக்குவரத்து பிரிவில் 85-டன் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 743-டன் என மொத்தம் 828-டன் கார்கோ கையாளப்பட்டுள்ளன.

கடந்த 2021-மார்ச் மாதத்துடன் இந்த ஆண்டு ஒப்பிடுகையில் பயணிகள் போக்குவரத்து 40-சதவீதம், கார்கோ போக்குவரத்து 10-சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 1,23,664-பயணிகள் மற்றும் 749- டன் கார்கோ கையாளப்பட்டன.

இந்த தகவல் இந்திய விமான நிலைய ஆணையகம் சார்பில் அறிவிக்கப்பட்டு, கோயம்புத்தூர் ஏர்போர்ட் நியூஸ் என்ற ட்விட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.

கொரோனா நோய் பரவல் காரணமாக விமான போக்குவரத்து மிக கடுமையாகப் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் சமீப காலமாக மெல்ல இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இன்றைய சூழலில் கோவை விமான நிலையத்தில் அதிகாலை முதல் இரவு வரை உள்நாடு மற்றும் வெளிநாடு போக்குவரத்து பிரிவுகளை சேர்த்து தினமும் 22-விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...