கோவை - சத்தி சாலையில்  அரசு கழிப்பிட சுவற்றில் மீது மோதி இருசக்கர வாகனம் விபத்து - 2 இளைஞர்கள் பலி.

ஒரே இரு சக்கர வாகனத்தில் மூன்று நண்பர்கள் பயணித்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரமாக இருந்த அரசு  பொதுக் கழிப்பிட சுவற்றில் பயங்கரமாக மோதியது.



கோவை: கோவை - சத்தி சாலையில்அரசு கழிப்பிட சுவற்றில் மீது மோதி இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதில், இரண்டு இளைஞர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி (21).ஸ்ரீஜித் (25).இவர்கள் இருவரும் அன்னூரில் உள்ள விடுதியில் தங்கி, தனியார் மில்லில் பணியாற்றி வந்தனர். இன்று, இருவரும் அன்னூரை சேர்ந்த தங்களது நண்பரான லூர்து சகாயராஜ் (25)என்பவருடன் ஒரே இரு சக்கர வாகனத்தில் அன்னூர்-சத்தி சாலையில் விளையாட்டாக வளைத்து, வளைத்து ஓட்டியபடி அதிக வேகமாக சென்றதாக கூறப்படுகிறது. 

அப்போது, சத்தி சாலையில் உப்புத்தோட்டம் கட் ரோடு அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்து, சாலை ஓரமாக இருந்த அரசு பொதுக்கழிப்பிட சுவற்றில் பயங்கரமாக மோதியது. இதில், கழிப்பிடத்தில் இருந்த மூதாட்டி லட்சுமி (60) என்பவர் படுகாயமடைந்தார்.

மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த கிருஷ்ணசாமி, ஸ்ரீஜித் உள்ளிட்ட இருவரும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தனர். விபத்தில், படுகாயமடைந்த லூர்து சகாயராஜ், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக அன்னூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...