கோவையில் திமுக மாணவர் அணியின் மாநில துணைச் செயலாளர் தலைமையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம்!

திமுக மாணவர் அணி சார்பில் சென்னையில் வரும் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான மாநாடு நடைபெற உள்ள நிலையில், கோவையில் இன்று திமுக மாணவர் அணியின் மாநில துணைச் செயலாளர் எஸ். மோகன் தலைமையில் நடந்தது.


கோவை: திமுக மாணவர் அணி சார்பில் வரும் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் கல்வி, சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு சென்னையில் நடக்க உள்ளது.

இந்த மாநாட்டில், திமுக மாணவர் அணியின் சார்பில் திமுக இளைஞர் அணி செயலாளர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.



இந்த மாநாடு குறித்தான, மேற்கு மண்டல அளவிலான மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று கோவை மாவட்டம் சூலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு, மாணவர் அணியின் மாநில துணைச் செயலாளர் எஸ். மோகன் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர், மாணவர் அணி மாநில துணைச் செயலாளர், சேலம் ர.தமிழரசன், திமுக மேற்கு மண்டல மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், மருத்துவர் V.G.கோகுல், SR பிரபு, பார்த்திபன் அந்தோனி ராஜ், தனம் தங்கதுரை மற்றும் மேற்கு மண்டல மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...