திமுக மாணவர் அணி சார்பில் சென்னையில் வரும் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான மாநாடு நடைபெற உள்ள நிலையில், கோவையில் இன்று திமுக மாணவர் அணியின் மாநில துணைச் செயலாளர் எஸ். மோகன் தலைமையில் நடந்தது.
கோவை: திமுக மாணவர் அணி சார்பில் வரும் 30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் கல்வி, சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான மாநாடு சென்னையில் நடக்க உள்ளது.
இந்த மாநாட்டில், திமுக மாணவர் அணியின் சார்பில் திமுக இளைஞர் அணி செயலாளர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.

இந்த மாநாடு குறித்தான, மேற்கு மண்டல அளவிலான மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று கோவை மாவட்டம் சூலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு, மாணவர் அணியின் மாநில துணைச் செயலாளர் எஸ். மோகன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர், மாணவர் அணி மாநில துணைச் செயலாளர், சேலம் ர.தமிழரசன், திமுக மேற்கு மண்டல மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், மருத்துவர் V.G.கோகுல், SR பிரபு, பார்த்திபன் அந்தோனி ராஜ், தனம் தங்கதுரை மற்றும் மேற்கு மண்டல மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில், திமுக மாணவர் அணியின் சார்பில் திமுக இளைஞர் அணி செயலாளர், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.
இந்த மாநாடு குறித்தான, மேற்கு மண்டல அளவிலான மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று கோவை மாவட்டம் சூலூர் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு, மாணவர் அணியின் மாநில துணைச் செயலாளர் எஸ். மோகன் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில், சிறப்பு அழைப்பாளர், மாணவர் அணி மாநில துணைச் செயலாளர், சேலம் ர.தமிழரசன், திமுக மேற்கு மண்டல மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர்கள், மருத்துவர் V.G.கோகுல், SR பிரபு, பார்த்திபன் அந்தோனி ராஜ், தனம் தங்கதுரை மற்றும் மேற்கு மண்டல மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் என்று பலர் கலந்து கொண்டனர்.