உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலைத் தொடர்களில் ஒன்றான பியாஸ் குண்ட் மலையில் 14,009 அடி ஏறி, கோவையை சேர்ந்த ஆட்டிசம் பாதித்த சிறுவன் சாதனை படைத்துள்ளார்.
கோவை: கோவை, சின்னவேடம்பட்டி சக்தி நகர் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி, வினய கஸ்தூரி தம்பதியினரின் மூத்த மகன் யதீந்திரா (12). இவர், ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்டதை அவரது இரண்டாவது வயதில் அறிந்த பெற்றோர், அவருக்கு யோகா, கராத்தே, நீச்சல் பயிற்சிகளை கற்றுக் கொடுத்து வந்துள்ளனர்.
தொடர் பயிற்சிகளால் மகனிடம் முன்னேற்றம் இருப்பதை அறிந்த பெற்றோர், இமயமலை பகுதிகளில் வழக்கமாக டிரெக்கிங் செல்லும் குடும்ப நண்பரான ஆண்ட்ரூ ஜோன்ஸ் என்பவருடன் தனியாக மலையேற்றப் பயிற்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தின் இமய மலைத் தொடர்களில் ஒன்றான 28,000 அடி உயரம் கொண்ட பியாஸ் குண்ட் மலையில் ஆண்ட்ரூ ஜோன்ஸ் உடன் மலை ஏறத் தொடங்கிய சிறுவன் யதீந்திரா, 4 நாட்களில் 14 ஆயிரம் அடி உயரத்தை எட்டி அசத்தியுள்ளார்.
மேலும், அங்கு தேசியக் கொடியை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இமயமலை தொடர்களில் 14 அடி உயரத்தை எட்டிய முதல் ஆட்டிசம் பாதித்த சிறுவன் இவர் என கூறப்படுகிறது. சிறுவனின் முயற்சி ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர் பயிற்சிகளால் மகனிடம் முன்னேற்றம் இருப்பதை அறிந்த பெற்றோர், இமயமலை பகுதிகளில் வழக்கமாக டிரெக்கிங் செல்லும் குடும்ப நண்பரான ஆண்ட்ரூ ஜோன்ஸ் என்பவருடன் தனியாக மலையேற்றப் பயிற்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதையடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தின் இமய மலைத் தொடர்களில் ஒன்றான 28,000 அடி உயரம் கொண்ட பியாஸ் குண்ட் மலையில் ஆண்ட்ரூ ஜோன்ஸ் உடன் மலை ஏறத் தொடங்கிய சிறுவன் யதீந்திரா, 4 நாட்களில் 14 ஆயிரம் அடி உயரத்தை எட்டி அசத்தியுள்ளார்.
மேலும், அங்கு தேசியக் கொடியை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இமயமலை தொடர்களில் 14 அடி உயரத்தை எட்டிய முதல் ஆட்டிசம் பாதித்த சிறுவன் இவர் என கூறப்படுகிறது. சிறுவனின் முயற்சி ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.