கோவையில் ஓய்வூதிய பணம் கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தந்தையை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த மகனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை புலியகுளம் பகுதியில் ஓய்வூதிய பணம் கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தந்தையை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த மகனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (61). இவரது மனைவி வசந்தி. பெயிண்டர் வேலை பார்த்து வந்த அவர் மகன் சுரேஷ்,
திருமணமாகி சிங்காநல்லூர் பகுதியில் தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கருப்பசாமி கடந்த சில மாதங்களாக வேறு ஒரு பெண்ணுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. மேலும், கருப்பசாமி தனக்கு வந்த ஓய்வூதிய பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் புளியகுளம் அருகே சாலையில் வைத்து சுரேஷ், கருப்பசாமியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார்.
இச்சம்பவம் தொடர்பாக, ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சுரேஷை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை அவரது செல்போன் சிக்னலை வைத்து சுரேஷை மடக்கி பிடித்து போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சுரேஷை சிறையில் அடைத்தனர்.
கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (61). இவரது மனைவி வசந்தி. பெயிண்டர் வேலை பார்த்து வந்த அவர் மகன் சுரேஷ்,
திருமணமாகி சிங்காநல்லூர் பகுதியில் தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில், கருப்பசாமி கடந்த சில மாதங்களாக வேறு ஒரு பெண்ணுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. மேலும், கருப்பசாமி தனக்கு வந்த ஓய்வூதிய பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் புளியகுளம் அருகே சாலையில் வைத்து சுரேஷ், கருப்பசாமியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார்.
இச்சம்பவம் தொடர்பாக, ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சுரேஷை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை அவரது செல்போன் சிக்னலை வைத்து சுரேஷை மடக்கி பிடித்து போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சுரேஷை சிறையில் அடைத்தனர்.