கோவை புலியகுளம் அருகே தந்தையை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மகனை மடக்கி பிடித்து கைது..!

கோவையில் ஓய்வூதிய பணம் கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தந்தையை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த மகனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை புலியகுளம் பகுதியில் ஓய்வூதிய பணம் கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், தந்தையை கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த மகனை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (61). இவரது மனைவி வசந்தி. பெயிண்டர் வேலை பார்த்து வந்த அவர் மகன் சுரேஷ்,

திருமணமாகி சிங்காநல்லூர் பகுதியில் தாய் மற்றும் மனைவியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கருப்பசாமி கடந்த சில மாதங்களாக வேறு ஒரு பெண்ணுடன் வசித்து வந்ததாக தெரிகிறது. மேலும், கருப்பசாமி தனக்கு வந்த ஓய்வூதிய பணத்தை அந்த பெண்ணிடம் கொடுத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் புளியகுளம் அருகே சாலையில் வைத்து சுரேஷ், கருப்பசாமியை கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார்.

இச்சம்பவம் தொடர்பாக, ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சுரேஷை தேடி வந்தனர். இந்நிலையில், இன்று காலை அவரது செல்போன் சிக்னலை வைத்து சுரேஷை மடக்கி பிடித்து போலீசார் அவரை கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சுரேஷை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...