கோவை தெற்கு தொகுதி 70வது வார்டில் நடைபெற்ற "நமது எம்.எல்.ஏ" வின் மக்களின் குறை தீர்க்கும் முகாமில் தெற்கு தொகுதி எம்.எல் ஏ வானதி சீனிவாசன் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
கோவை: கோவை தெற்கு தொகுதி 70வது வார்டில் "நமது எம்.எல்.ஏ" வின் மக்களின் குறை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. இதில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கலந்துகொண்டு அப்பகுதி மக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பெரும்பாலும் சாலை வசதிகள் குறித்தான கோரிக்கை மனுக்களை அதிகப்படியான மக்கள் அளித்ததாக கூறப்படும் நிலையில், அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர், வானதி சீனிவாசன், உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிகழ்வில், அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பிரகாஷ், சுரேஷ்பாபு, ஜனார்தனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பெரும்பாலும் சாலை வசதிகள் குறித்தான கோரிக்கை மனுக்களை அதிகப்படியான மக்கள் அளித்ததாக கூறப்படும் நிலையில், அவர்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்ட சட்டமன்ற உறுப்பினர், வானதி சீனிவாசன், உடனடியாக மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
இந்நிகழ்வில், அப்பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகிகள் பிரகாஷ், சுரேஷ்பாபு, ஜனார்தனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.