இன்று ஆளுநர் வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையம் அருகே கருப்பு உடை அணிந்து வந்த பொதுமக்களிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
கோவை: இன்று கோவை விமான நிலையம் வந்த தமிழக ஆளுநர் ரவி, அங்கிருந்து சாலை மார்கமாக நீலகிரி மாவட்டம், ஊட்டி செல்கிறார். இதனையொட்டி, கோவை விமான நிலையம் மற்றும் அவிநாசி சாலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளதாக, பல்வேறு அமைப்புகள் நேற்றைய தினம் தெரிவித்திருந்தது. பின்னர், அது ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தனர்.
இதனையொட்டி, இன்று ஆளுநர் வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான நிலையம் அருகே கருப்பு உடை அணிந்து வந்த பொதுமக்களிடம் காவல்துறையினர் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.

அவர்களது, வாகனம் மற்றும் உடமைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும், கருப்பு கொடி யாரேனும் வைத்துள்ளார்களா.? அல்லது கருப்பு துணி ஏதேனும் வைத்துள்ளார்களா? என போலீசார் சோதனை செய்தனர்.

இந்த நிலையில், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ள உள்ளதாக, பல்வேறு அமைப்புகள் நேற்றைய தினம் தெரிவித்திருந்தது. பின்னர், அது ரத்து செய்யப்பட்டதாக அறிவித்தனர்.
இதனையொட்டி, இன்று ஆளுநர் வருகையையொட்டி கோவை விமான நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில், விமான நிலையம் அருகே கருப்பு உடை அணிந்து வந்த பொதுமக்களிடம் காவல்துறையினர் சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.
அவர்களது, வாகனம் மற்றும் உடமைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மேலும், கருப்பு கொடி யாரேனும் வைத்துள்ளார்களா.? அல்லது கருப்பு துணி ஏதேனும் வைத்துள்ளார்களா? என போலீசார் சோதனை செய்தனர்.