பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமின் போது, சிறுமி தன் உடல் உபாதைகள் குறித்து தெரிவித்துள்ளார். மருத்துவர்கள், பரிசோதனை செய்த போது, சிறுமிக்கு பாலியல் சீண்டல்கள் நடந்திருப்பது தெரியவந்தது.
கோவை: மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரத்தினம் (47) என்பவர், கோவையில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில், தோட்ட உரிமையாளரின் 8 வயது மகள், தோட்டத்தில் விளையாட சென்ற போது ரத்தினம் சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுமி படிக்கும் பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
அப்போது, பரிசோதனைக்கு சென்ற சிறுமி தன் உடல் உபாதைகள் குறித்து தெரிவித்துள்ளார். அப்போது, மருத்துவர்கள் சிறுமியை அழைத்துச் சென்று பரிசோதனை செய்த போது, சிறுமிக்கு பாலியல் சீண்டல்கள் நடந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, மருத்துவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், ரத்தினம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுமி படிக்கும் பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
அப்போது, பரிசோதனைக்கு சென்ற சிறுமி தன் உடல் உபாதைகள் குறித்து தெரிவித்துள்ளார். அப்போது, மருத்துவர்கள் சிறுமியை அழைத்துச் சென்று பரிசோதனை செய்த போது, சிறுமிக்கு பாலியல் சீண்டல்கள் நடந்திருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து, மருத்துவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், ரத்தினம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.