கோவையில் 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தோட்டத் தொழிலாளி போக்சோவில் கைது!

பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமின் போது, சிறுமி தன் உடல் உபாதைகள் குறித்து தெரிவித்துள்ளார். மருத்துவர்கள், பரிசோதனை செய்த போது, சிறுமிக்கு பாலியல் சீண்டல்கள் நடந்திருப்பது தெரியவந்தது.


கோவை: மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ரத்தினம் (47) என்பவர், கோவையில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கி வேலை செய்து வந்தார். இந்த நிலையில், தோட்ட உரிமையாளரின் 8 வயது மகள், தோட்டத்தில் விளையாட சென்ற போது ரத்தினம் சிறுமிக்கு ஆபாச வீடியோக்களை காட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அடிக்கடி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிறுமி படிக்கும் பள்ளியில் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.

அப்போது, பரிசோதனைக்கு சென்ற சிறுமி தன் உடல் உபாதைகள் குறித்து தெரிவித்துள்ளார். அப்போது, மருத்துவர்கள் சிறுமியை அழைத்துச் சென்று பரிசோதனை செய்த போது, சிறுமிக்கு பாலியல் சீண்டல்கள் நடந்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, மருத்துவர்கள் சிறுமியின் பெற்றோரிடம் தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சிறுமியின் உறவினர்கள் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், ரத்தினம் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...