கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தால், பல கோடி வருவாய் இழப்பு

டீசல், இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் உதிரிப்பாகங்கள் விலை உயர்வு காரணமாக, கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கம் சார்பில் மூன்று நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.


கோவை: டீசல், இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் உதிரிப்பாகங்கள் விலை உயர்வு காரணமாக, கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கம் சார்பில் மூன்று நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றுவருவதால், பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.



தொடர்ந்து, உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் உதிரிப்பாகங்கள் விலை உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கத்தினர் நேற்று, ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் மூன்று நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



வேலை நிறுத்தம் காரணமாக, 1500 ஜேசிபி க்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு பணிகள் நடைபெறாமல் முடங்கியுள்ளது.



மேலும், அடையாள வேலை நிறுத்தத்தால், சுமார் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



"தொடர்ந்து, உயர்ந்து வரும் டீசல் விலையால் ஜேசிபி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இன்சூரன்ஸ், சாலை வரி, உதிரிப்பாகங்கள் விலையை கட்டுக்குள் கொண்டு வர அரசு முனைப்பு காட்ட வேண்டும்", என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...