டீசல், இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் உதிரிப்பாகங்கள் விலை உயர்வு காரணமாக, கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கம் சார்பில் மூன்று நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.
கோவை: டீசல், இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் உதிரிப்பாகங்கள் விலை உயர்வு காரணமாக, கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கம் சார்பில் மூன்று நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றுவருவதால், பல கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து, உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் உதிரிப்பாகங்கள் விலை உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கத்தினர் நேற்று, ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் மூன்று நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலை நிறுத்தம் காரணமாக, 1500 ஜேசிபி க்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு பணிகள் நடைபெறாமல் முடங்கியுள்ளது.

மேலும், அடையாள வேலை நிறுத்தத்தால், சுமார் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

"தொடர்ந்து, உயர்ந்து வரும் டீசல் விலையால் ஜேசிபி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இன்சூரன்ஸ், சாலை வரி, உதிரிப்பாகங்கள் விலையை கட்டுக்குள் கொண்டு வர அரசு முனைப்பு காட்ட வேண்டும்", என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து, உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, இன்சூரன்ஸ், சாலை வரி மற்றும் உதிரிப்பாகங்கள் விலை உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் சங்கத்தினர் நேற்று, ஏப்ரல் 21 ஆம் தேதி முதல் மூன்று நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலை நிறுத்தம் காரணமாக, 1500 ஜேசிபி க்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பல்வேறு பணிகள் நடைபெறாமல் முடங்கியுள்ளது.
மேலும், அடையாள வேலை நிறுத்தத்தால், சுமார் 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"தொடர்ந்து, உயர்ந்து வரும் டீசல் விலையால் ஜேசிபி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, இன்சூரன்ஸ், சாலை வரி, உதிரிப்பாகங்கள் விலையை கட்டுக்குள் கொண்டு வர அரசு முனைப்பு காட்ட வேண்டும்", என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.