மாநகராட்சி பணம் செலுத்தாததால், எப்.சி க்கு சென்ற குப்பை அள்ளும் வாகனங்கள் இன்னும் திரும்பவில்லை - மத்திய மண்டல தலைவர் மீனா லோகு கோரிக்கை

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட குப்பை அள்ளும் லாரிகள், ஆட்டோக்கள், எப்.சி செய்வதற்காக பல மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், எப்.சி செய்ய மாநகராட்சி பணம் கொடுக்காததால், இன்னும் வாகனங்கள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படவில்லை.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் குப்பைகளை எடுக்க போதுமான வாகனம் இல்லாதது குறித்து மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகோ, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கராவிற்கு கடிதம் வழங்கி உள்ளார்.

அதில், கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வட்டங்களில் குப்பைகளை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டு வந்த மாநகராட்சி லாரிகள், ஆட்டோக்கள், எப்.சி செய்வதற்காக பல மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், எப்.சி செய்ய மாநகராட்சி பணம் கொடுக்காததால், இன்னும் வாகனங்கள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படவில்லை.

இதனால், மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் முறையாக குப்பைகளை அப்புறப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு, மத்திய மண்டலத்துக்கு ஒதுக்கப்பட்ட குப்பை அள்ளும் வாகனங்கள் அனைத்தும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்", என்று மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...