மாநகராட்சி பணம் செலுத்தாததால், எப்.சி க்கு சென்ற குப்பை அள்ளும் வாகனங்கள் இன்னும் திரும்பவில்லை - மத்திய மண்டல தலைவர் மீனா லோகு கோரிக்கை

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட குப்பை அள்ளும் லாரிகள், ஆட்டோக்கள், எப்.சி செய்வதற்காக பல மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், எப்.சி செய்ய மாநகராட்சி பணம் கொடுக்காததால், இன்னும் வாகனங்கள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படவில்லை.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் குப்பைகளை எடுக்க போதுமான வாகனம் இல்லாதது குறித்து மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகோ, மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கராவிற்கு கடிதம் வழங்கி உள்ளார்.

அதில், கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட வட்டங்களில் குப்பைகளை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டு வந்த மாநகராட்சி லாரிகள், ஆட்டோக்கள், எப்.சி செய்வதற்காக பல மாதங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், எப்.சி செய்ய மாநகராட்சி பணம் கொடுக்காததால், இன்னும் வாகனங்கள் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்படவில்லை.

இதனால், மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் முறையாக குப்பைகளை அப்புறப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, உடனடியாக இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டு, மத்திய மண்டலத்துக்கு ஒதுக்கப்பட்ட குப்பை அள்ளும் வாகனங்கள் அனைத்தும் மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவர ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்", என்று மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...