தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயிலில் 12-கிலோ கஞ்சா பறிமுதல் - எடுத்து வந்த மர்ம நபர்களுக்கு ரயில்வே போலீசார் வலை வீச்சு…!

கோவை ரயில் நிலையம் வந்த ரயிலில் சோதனை மேற்கொண்ட போது கழிவறை அருகே 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதை எடுத்து வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: 'ஆபரேஷன் 2.0' என்ற பெயரில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை வழியாக கேரளா செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் கோவை வந்த ரயில்களில், ரயில்வே போலிசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கோவை ரயில் நிலையம் வந்த தன்பாத் -ஆலப்புழா விரைவு ரயிலில், ரயில்வே போலீசார் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ரயிலில் உள்ள ஜெனரல் கோச்சில் சோதனை மேற்கொண்ட போது அங்கிருந்த கழிவறை அருகே சில மூட்டைகள் கிடந்துள்ளது. அதை எடுத்து சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அங்கிருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதை எடுத்து வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கமாக ரயில்வே போலீசார் திடீரென சோதனை மேற்கொள்ளும்போது கஞ்சாவை எடுத்து வரும் நபர்கள் போலீசாரை பார்த்தவுடன் ரயில் நிலையத்திலோ, அல்லது வேறு பெட்டிகளுக்கு தப்பி சென்று வருகின்றனர்.

மேலும், ரயில் வழியாக அதிக அளவு தமிழகத்திற்கு கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் நடத்தி வருவதால் தமிழக இருப்புப்பாதை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு குற்றவாளி மீது கைதிகள் தாக்குதல்; 5 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், மத்திய சிறையில் குற்றவாளி க...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...