தன்பாத் - ஆலப்புழா விரைவு ரயிலில் 12-கிலோ கஞ்சா பறிமுதல் - எடுத்து வந்த மர்ம நபர்களுக்கு ரயில்வே போலீசார் வலை வீச்சு…!

கோவை ரயில் நிலையம் வந்த ரயிலில் சோதனை மேற்கொண்ட போது கழிவறை அருகே 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதை எடுத்து வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: 'ஆபரேஷன் 2.0' என்ற பெயரில் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை வழியாக கேரளா செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் கோவை வந்த ரயில்களில், ரயில்வே போலிசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கோவை ரயில் நிலையம் வந்த தன்பாத் -ஆலப்புழா விரைவு ரயிலில், ரயில்வே போலீசார் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ரயிலில் உள்ள ஜெனரல் கோச்சில் சோதனை மேற்கொண்ட போது அங்கிருந்த கழிவறை அருகே சில மூட்டைகள் கிடந்துள்ளது. அதை எடுத்து சோதனை செய்தபோது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அங்கிருந்த 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் அதை எடுத்து வந்த மர்ம நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வழக்கமாக ரயில்வே போலீசார் திடீரென சோதனை மேற்கொள்ளும்போது கஞ்சாவை எடுத்து வரும் நபர்கள் போலீசாரை பார்த்தவுடன் ரயில் நிலையத்திலோ, அல்லது வேறு பெட்டிகளுக்கு தப்பி சென்று வருகின்றனர்.

மேலும், ரயில் வழியாக அதிக அளவு தமிழகத்திற்கு கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் நடத்தி வருவதால் தமிழக இருப்புப்பாதை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...